அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை சர்வதாரி-1 ஆடி-4
விலை : ரூ.10/
நிறுவனர் ,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. திருக்குறள் – அறன் வலியுறுத்தல் ……………… 2
2. ஜீவகாருண்ய ம்-தொடர் ……….
3. புண்ணிய செயல்களின் விபரம்-தொடர் ……………
4. விநாயகர் அகவல் ……
5. ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்-தொடர்………..
6. ஓங்காரக்குடில் ஆசான் அனுபவ உரை-தொடர் ….
7. மகான் திருமூலர் ஆசி நூல் – V.T.பரணீதரன் …….
8. மகான் பட்டினத்தார் பாடல்கள் ………………..
9. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி என்றால் ….
10. சன்மார்க்க ப் பயிற்சி ……..
11. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ………
______________________________ வெளியீடு ___________________________________
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,
ஓங்காரக்குடில்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
( 04327 – 256525, 255184
___________________________________________________________________________
திருக்குறள்
“அறன் வலியுறுத்தல்”
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு 31
ஆக்கம் எவனோ உயிர்க்கு?
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை, அதனை 32
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 33
செல்லும்வா யெல்லாம் செயல்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன், 34
ஆகுல நீர பிற.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 35
இழுக்கா இயன்றது அறம்.
அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்று அது 36
பொன்றும்கால் பொன்றாத் துணை.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை 37
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன் 38
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் 39
புறத்த, புகழும் இல.
செயற்பாலது ஓரும் அறனே, ஒருவற்கு 40
உயற்பால தோரும் பழி.
_______________________________________________________________________
ஞானத்திருவடி bhakti books online
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞான வாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமண்யரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும். மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 32 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாகப் பார்த்து அவர்களுக்கு வரும் துன்பத் துயரங்களிலிருந்து விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக் கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். ஆகவே இந்த மாத இதழை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்து ஞானிகளின் ஆசிபெற வேண்டுகிறேன். அன்புடன், இரா.மாதவன். |
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை
திருக்குறள்
அறன் வலியுறுத்தல் – அதிகாரம் 4
“அறம் செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கு நன்மை உண்டு என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியுள்ளார். அதுபோலவே மறந்தால் அறக்கடலாக விளங்கும் திருவள்ளுவரும் அறம் செய்வதில் வழுவாது இருக்க வேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் தெரிவிக்கின்றார்.
தர்மம் சிறப்பை உண்டாக்கும்; புகழையும் தரும். உயிர்க்கு அறத்தைவிட உயர்ந்த உபாயம் வேறு எதுவும் இல்லை. உடம்பைப்பற்றிக் கூறாமல் இங்கு உயிருக்கு உபாயத்தைக் கூறியதற்குக் காரணம் என்னவென்றால், உடம்புக்கு நரை, திரை, மூப்பு உண்டு. உயிருக்கு அது கிடையாது. உயிர் குறுகாது, விரியாது, நலியாது. எனவே தர்மம் உயிருக்கு ஆக்கம் தர வல்லது. இந்த ஜென்மத்தில் செய்கின்ற புண்ணியம் தொடர்ந்து பல ஜென்மத்தில் உயிரைக் காக்க வல்லதாக இருக்கும். எனவே, அறத்தை விட, அழியாத உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இல்லை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.
அறத்தை விட மேன்மையானது வேறு எதுவும் இல்லை. தர்மம் செய்யச் செய்ய தன்னைப்பற்றி அறியும்
க ஞானத்திருவடி
சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும். அதை மறந்தால் கேடு வந்து மீண்டும் பிறந்து, துயரத்தில் சிக்கிக் கொள்வான். அவ்வாறு அறம் செய்தோரை மறக்காமல் அவர்களைப் போற்றுதலும் சிறப்பானதாகும். முடிந்த
அளவுக்கு அறப்பணி செய்ய வேண்டும். அதனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வாய்ப்புக் கிடைத்த இடத்திலெல்லாம் செய்யலாம். குறையில்லாத மனம் எங்கிருக்கிறதோ அங்கு அறம் நிலைத்து நிற்கும். குற்றமில்லாத மனம் இருந்தால் அதுவே அறம். காம தேகம் இருக்கும் வரை அறியாமை இருக்கும்; அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று இருக்கும். திருவருள் துணை கொண்டு இத்தகைய குணங்களை வென்றவனுக்கு, குற்றமற்ற மனம் இருக்கும். அதுவே அறமாகும். அறத்தை விளம்பரப் படுத்துபவன் தன்னை ஏமாற்றிப் பிறரையும் ஏமாற்றுவான்.
பொறாமை, ஆசை, வெகுளி , கோபம், கடுஞ்சொல் இந்த ஐந்து குணக் கேடுகளும் ஒருவனிடம்
ஞானத்திருவடி
இருக்கும்வரை அவனால் அறம் செய்ய முடியாது. செய்தாலும் பயனற்றதாகி விடும். இந்த கேடுகள் மனதில் வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். இளமை உள்ள போதே அறப்பணி செய்ய வேண்டும். உடல் நலிந்து முதுமை வரும் நாளில் துணை நிற்பதும் உதவுவதும் முன் அறமே ஆகும்.
பல்லக்கில் வரும் உயர்ந்த அரசன், மற்றும் தாங்கள் மேல் நிலையில் இருப்பதாக கருதிக் கொள்பவர்களை பல்லக்கில் தூக்கி செல்கின்றவனைப் பார்த்து, மேலே அமர்ந்திருப்பவன் புண்ணியவான் என்றோ, கீழே தூக்கிச் செல்பவன் பாவியென்றோ கூறுதல் கூடாது. அறியாமை சூழ்ந்தால் தவறு அந்த பாவபுண்ணியச் செயல்களை செய்வான். நம் மனதில் மட்டுமே அறிதல் வேண்டும்.
வேண்டும். சிறந்த முயற்சியுடன் அறப்பணியைச் செய்து வரவேண்டும். அவ்வாறே பூஜையும், புண்ணியமும் தொடர்ந்து செய்தால், மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். தவறினால் மீண்டும் கருப்பைக்குள் செல்லுவான். முயன்று தவம் செய்து, அதனால் பெறுவதே சுகம். வேறு வழியில் இன்பம் பெற முயற்சித்தால் அது இன்பமாகவோ, புகழாகவோ இருக்காது. முயன்று செய்து கொள்ளத்தக்கது அறமே. மரணமற்று வாழவேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் தடைபடாது தர்மமும் பக்தியும் செலுத்தவேண்டும். அறம் செய்யாவிடில் அறியாமை சூழும். அறியாமை சூழ்ந்தால் செய்வான். அப்போது அவனுக்குப் பழிவரும். பழியில்லாத வாழ்வு வாழ வேண்டுமெனில் அறம் செய்ய வேண்டும். அப்போது சிறப்பறிவு உண்டாகும். பெருந்தன்மை உண்டாகும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.திருமந்திரம் – 1823 |
– ஞானத்திருவடி தொடர்…
அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய
இராமலிங்க சுவாமிகள் அருளிய
ஜீவகாருண்யம்
15. நேற்றுப் பட்டினி கிடந்தது போல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலிய வசத்தால் இன்னும் பட்டினி கிடக்கத் துணிவோமாயினும், பட்டினி சகியாத தமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் மிகவுஞ் சோர்ந்த நமது தாய், தந்தையர் இன்னும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே? இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்?’ என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும், பய நெருப்பும் விசார நெருப்பும் உள்ளே மூண்டபடியிருக்க, கன்னப்புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர்கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே – ஜீவகாருண்யம்.
16. கண், கை, கால் முதலிய உறுப்புகளிற் குறைவில்லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்கத்தக்க சக்தியுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள். குருடும், செவிடும், ஊமையும் முடமுமாக இருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்? பசி எப்படி நீங்கும்?’ என்று நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு
ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே – ஜீவகாருண்யம்.
17. பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்த ஜாதியாராயினும், எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேசவொழுக்கம், சமயவொழுக்கம், ஜாதியொழுக்கம், செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லா ஜீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து, பொதுவாகப் பார்த்து, அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி, அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே – ஜீவகாருண்யம்.
18. சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசி நிவர்த்தி
செய்து கொள்ளத்தக்க மிருகம், பறவை, ஊர்வன, தாபரம் என்கின்ற உயிர்களுக்குப் பசி வந்த போது, பசியை நிவர்த்தி செய்விப்பதே
– ஜீவகாருண்யம்.
– அடுத்த இதழில் தொடரும்
____________________________________________________________________________
தொடர் …
ஞானத்திருவடி
நாம் புண்ணியவான் ஆவதற்கு ஓங்காரக்குடில் ஆசான் அருளிய
புண்ணிய செயல்களின் விவரம்
16. சாலையில் செல்லும் காலத்தில் ஆணி, உடைந்த கண்ணாடிகள், கற்கள்,
முட்கள், வாழைப்பழத் தோல் போன்றவை கிடக்கும். இதை
அப்புறப்படுத்துவதும் புண்ணியமாகும்.
17. கண்ட இடங்களில் சுகாதாரகேடு வரும்படி அசுத்தம் செய்யாதிருப்பதும் | புண்ணியமாகும்.
18. ஆண்களை படைத்த அதே கடவுள் தான் பெண்களையும் | படைத்திருக்கிறான். பெண்களை மதித்து நடப்பதே புண்ணியமாகும்.
19. எல்லாம் வல்ல பரப்பிரம்மமாகிய மெய்ப்பொருளை அறியாத மூடர்களை
காணாதிருப்பதும் புண்ணியமாகும்.
20. மெய்ப்பொருளை கற்றுணர்ந்த ஞானிகளுக்கு தொண்டு செய்து ஆசி
பெறுவது புண்ணியமாகும். |
21. பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண ஆசான்
அகத்தீசரின் ஆசிபெறுவது புண்ணியமாகும்.
22. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கு தீமைகள் | நீங்கி வாழ்வது புண்ணியமாகும்.
23. பொருளின் இயல்பே நிலையில்லாதது என்று அறிந்து பொருள் இருக்கும் பொழுதே அறப்பணி செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வது புண்ணியமாகும்.
24. நாம் காணுகின்ற அத்தனையும் அழியக்கூடியது என்று அறிந்து அதை
கண்டு மயங்காது தெளிவடைவது புண்ணியமாகும்.
25. நாம் காணுகின்ற பொருள்களில் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு.
அதில் உண்மையை மட்டும் காண்பது புண்ணியமாகும். |
26. இந்த உடம்பு பொய்தான். அதில் உண்மைப்பொருள் இருப்பது அறிந்து
அந்த உண்மைப்பொருளாக தாம் ஆகிவிடுவது புண்ணியமாகும்.
27. ஆன்ம லாபம் அடைய விரும்புபவர்கள் உண்மை பொருளை உணர்ந்த
ஆசானை தேடி அலைவார்கள். அவர்களுக்கு உண்மை பொருள் உணர்ந்த
ஆசான் கிடைத்தால் அதுவும் புண்ணியமாகும்.
28. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தீயநட்போடு சேர்ந்திருந்தாலும் அந்த நட்பு நம்மை விட்டு நீங்கி விடுவது புண்ணியமாகும்.
ஞானத்திருவடி |
29. குடிப்பழக்கம், சூதாடும்பழக்கம் போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதும்
புண்ணியமாகும்.
30. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் | விரும்பினால் மறுமணம் செய்துவைப்பது புண்ணியமாகும்.
31. வியாபாரம் செய்யும்பொழுது நாம் விற்கக்கூடிய பொருட்களை நியாயமான
விலைக்கு விற்பது புண்ணியமாகும்.
32. குடும்பத் தலைவன் தன் மனைவியின் தாய், தந்தையாகிய மாமன், மாமிக்கு பாதுகாவலராக இருப்பது புண்ணியமாகும். அதே போல, குடும்பத் தலைவி தன் கணவனுடைய தாய், தந்தையாகிய மாமன், மாமி மகிழும்படி நடந்துகொள்வது புண்ணியமாகும். 33. நமக்கு தக்க சமயத்தில் உதவி செய்தவர்களை சாகும்வரை
மறவாதிருப்பதும் புண்ணியமாகும்.
34. உண்மை பொருளறிந்த ஆசானுக்கு பண்புள்ள சீடன் அமைந்தால் அதுவும் புண்ணியமாகும்.
-தொடரும்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்அவர்கள் தலைமையில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நாள் : 17.07.2008 – வியாழக்கிழமை, காலை 9 மணி அளவில் இடம் : ஓங்காரக்குடில், துறையூர். அன்புடையீர் வணக்கம்,துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடை பெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும். இந்த பௌர்ணமி திருவிளக்கு பூஜைக்கு 10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து பூஜை செய்பவர்கள்திரு. S.K.சித்துராஜ், ஈரோடு, திரு. B.A.முகம்மதுஷரீப், விக்கிரவாண்டி. திரு. M.துரைராஜீ, திரு. S.ரமேஷ், புதுவை. அடுத்த திருவிளக்கு பூஜை நாள் : 16.08.2008 – சனிக்கிழமை |
“ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி”
மகான் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல், வீடுபேறு அடைவது பற்றியே பேசுவதாகும். இதை ஞானிகள் ஆசி இல்லாமல் அறிந்துகொள்ள முடியாது. ஞானிகள் திருவடியை பூஜிக்க பூஜிக்கதான் இதில் உள்ள நுட்பங்களை தெரிந்துகொள்ள முடியும்.
உயிர்க்கொலை தவிர்த்தும் புலால் மறுத்தும் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்குப் பசியாற்றியும் ஞானிகள் திருவடியை பூஜித்தும் ஆசிபெறுகின்ற மக்களுக்கு இதில் உள்ள நுட்பங்களை தெரிந்துகொள்ள முடியும். எனவே ஞானக்கடலாகிய ஒளவையார் திருவடியைப் போற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
– குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அணுவினுள் அணுவைக்கண்ட ஔவையார் அருளிய
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 5
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயா பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக் கருளி
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
_______________________________________________________________________
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனி தெனக்கு அருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில் 60
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே. 72
– சிவமயம் –
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய
ஏழைகளுக்குப் பசியாற்றிவைத்தால் வரும்
நன்மைகள்
சன்மார்க்கம்
58) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கடன் வாங்கி வீடுகட்டுவது
நல்லதல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்.
59) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தங்கத்தை வாங்கி சேமித்து வைக்காமல் அந்த பணத்தை வங்கியில் முதலீடு செய்து வைத்தால் பாதுகாப்பும், வட்டியும் கிடைக்கும்; நாட்டிற்கும் பயன்படும்; வீட்டிற்கும் பயன்படும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
60) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உள்நாட்டிலேயே வாழ்வதற்குரிய வேலைவாய்ப்பு அமையும். வெளிநாடு சென்று பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.
61) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உண்மை நண்பர்களிடையே
பகைமையை உண்டாக்குவது பாவச்செயல் என்று அறியலாம்.
62) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தீய உணர்வுகளை தூண்டக்கூடிய டிவி நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடாது என்பதை அறியலாம்.
63) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் டிவியில் விளையாட்டு சம்பந்தமான காட்சிகளை காண்பதால் வீண்பொழுது கழிக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
64) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் இரவு 12 மணிவரை டிவி பார்ப்பது உடம்பிற்கு கேடு தரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
65) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மலச்சிக்கலால் வரும் கேட்டை அறிந்துகொள்ளலாம்.
66) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பிறரை மதித்து வாழவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
67) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் யான் என்ற கர்வம் இல்லாது தன்னடக்கத்துடன் வாழலாம்.
68) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாது பண்புடன் வாழலாம்.
69) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நமக்கு இடையூறு
செய்பவர்களுக்கும் நாம் மீண்டும் இடையூறு செய்யாது இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
70) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் எந்தச் செயலும் நேர்மையுடன் செய்யவேண்டும் என்ற உணர்வு உண்டாகும்.
71)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு மலச்சிக்கலே காரணம் என்பதை அறிந்து உடல் ஆரோக்கியத்துடன் வாழும் அறிவை பெறலாம்.
72) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தன் குடும்பத்திற்கு தேவையான உடன் காலத்திட்டத்தையும், குறுகிய காலதிட்டத்தையும், நீண்டகால திட்டத்தையும் அறிந்துகொள்ளலாம்.
73) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் எதையும் சந்தேகப்பட்டு முடிவெடுக்காது ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற அறிவை பெறலாம்.
74) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மறதிதான் பலகேடுகள் தருவதோடு எதிர்காலத்தையும் பாதிக்கும் அறிந்துகொள்ளலாம்.
75) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தன்னை மதிப்பவர் பிறரை மதிக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்ளலாம்.
76) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஒப்புரவினால் வரும் நன்மைகளை அறிந்துகொள்ளலாம்.
77) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஈகை குணத்தின் பெருமையை அறிந்துகொள்ளலாம்.
78) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தனக்கு கிடைத்த பொருளை ‘பொதுகுளத்தில் நிரம்பிய தூய நீர்போல் எல்லோருக்கும் பயன்படுத்தவேண்டும்’ என்ற எண்ணத்தை பெறலாம்.
79) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் இவ்வுலகமே பொன்னுலகமாக மகிழ்ச்சியைத் தரும் என்பதை அறியலாம்.
80) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் துன்பத்தைக்கண்டு அஞ்சாத
நெஞ்சம் பெறலாம்.
81) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வறுமையிலும் செம்மையாக வாழலாம்.
– அடுத்த இதழில் தொடரும்
ஞானத்திருவடி தொடர்…
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின்
அனுபவ உரை
அடியேன் யோக நிலையையும், ஞான நிலையையும் அறிந்து கொள்ள பல குருமார்களை தேடி அலைந்தேன். ஒவ்வொருவரும் யோகத்தைப் பற்றி சொன்னார்கள். அதில் எனக்கு நன்மை ஏற்படவில்லை. துறையூர் அவல்பட்டறை தெருவில் சித்த வைத்திய மேதையும், சித்த
தத்துவ மேதையுமான பெ.சின்னசாமி சாஸ்திரி அவர்கள்தான் யோக ஞானத்தைப் பற்றியும், ஆசான் அகத்தீசர் ஆசியால்தான் ஞானத்தைப் பெறமுடியும் என்பதையும் அவர் உபதேசத்தால் அறிந்து கொண்டேன். அவர் உபதேசத்தின்படி தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு நேரங்களிலும் ஆசான் அகத்தீசரை “ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்து வந்தேன்.
25. தூய மனமில்லாதவர், அருளைப்பெற முடியாது என்பதை என்னால் அறிய முடியவில்லை . ஆகவே, தூயமனமும், உன் அருளைப்பெறுவதற்கும் நீ எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
26. முன் செய்த பாவங்கள் தான் பொல்லாத காமதேகமும், கொடிய வறுமையும், யான் என்ற கர்வமும், சான்றோர்களை நாடி ஆசிபெறாத மூடத்தனமும் இருக்கும் என்று என்னால் அறியமுடியவில்லை. எனவே, நான் முன்செய்த பாவங்கள் தீரவும், நற்பண்புடன் வாழவும் எனக்கு நீ அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
27.சான்றோர்கள் நட்பும், சாதுசங்க தொடர்பும் இருந்தால் தான் குணக்கேடுகளை அறியவும், நீக்கவும் முடியும் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. சான்றோர்கள் நட்பும், சாதுசங்க தொடர்பும் எனக்கு அமைய அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
___________________________________________________________________________
28. முன் செய்த வினை காரணமாக சான்றோர்களை நாடுதலும்,
அவர்களுடைய உபதேசம் பெறுதலும் வேண்டும் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே, சான்றோர்களை நாடவும், அவர்கள் உபதேசத்தைப் பெறவும், ஜென்மத்தைக் கடைத்தேற்றவும் நீ அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
29.முன் செய்த வினையின் காரணமாக, நான் மிகவும் அறிவுடையவன் என்று பெருமிதம் கொண்டு இருக்கிறேன். அதுவே மீண்டும் மீண்டும் பிறவிக்குக் காரணம் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனவே, அதுபோன்ற குணக்கேடுகளை நீக்கி, எனக்கு அருளவேண்டும் என்று வேண்டிக் கேட்டேன்.
30.பொருள் கொடாத லோபித்தனமும், பிறரை மதியாத குணக்கேடும் என்னிடம் உள்ளது. ஆகவே, இதுபோன்ற குணக்கேடுகள் நீங்க அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
31.பொறாமை, பேராசை, கட்டுக்கடங்கா சினம், பிறர்மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே மீண்டும் பிறவிக்குக் காரணம் என்பதை என்னால் அறியமுடியவில்லை. குணக்கேடுகள் நீங்கவும் இதுபோன்ற குணக்கேடுகள் மீண்டும் வராமல் இருக்கவும் நீ எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
32.ஜீவகாருண்யம் இல்லாதவர்களுக்கு ஞானவாழ்வு இல்லை என்பதை என்னால் அறிய முடியவில்லை. எனவே, ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல் என்பதை உன் அருளால் எனக்கு உணர்த்திடவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
33. உன் திருவருளால் செல்வம் பெற்றிருந்தாலும், அதை வறியவர்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மனம் எனக்கு இல்லை. அதுவே ஆன்மலாபம் பெற தடையாக இருக்கும் என்பதை என்னால் அறிய முடியவில்லை. எனவே, மனமுவந்து பிறருக்கு உதவ அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக் கேட்டேன்.
34.புண்ணிய பலமும், அருள் பலமும் இல்லாதவர்களுக்கு ஞானவாழ்வு கிட்டாது என்பதை என்னால் அறிய முடியவில்லை. எனவே, புண்ணிய பலமும், அருள்பலமும் பெற்று வீடுபேறு அடைய அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
– அடுத்த இதழில் தொடரும்
ஞானத்திருவடி எனும் மாத நூலின் சிறப்புகளை
மகான் திருமூலர் தன் சுவடி மூலம் அருளிய அருள்வாக்கு
மகான் திருமூலர் ஆசிகாண்டம்
1. மாதவத்தை புரிந்துவரும் அரங்கா போற்றி
மகான்கள் வழி நடந்து வரும் அரசா போற்றி
பூதலத்தை காக்க வந்த தேசிகா போற்றி
புண்ணியம் தரும் நின் திருவடிகள் போற்றி போற்றி
2.போற்றியே திருமூலர் என் ஆசிதன்னை
புகலவந்தேன் சுவடிவழி இன்று நாளில்
பார்காக்க தவம்புரிந்த அரங்கா வாழ்க
பார்சிறக்க அறம்புரிந்த அரசா வாழ்க
3. வாழ்கவே உலக மக்கள் ஞானம் பெற
வழிகாட்டி சேவைபல செய்தாய் ஐயா
வாழ்வளித்தாய் பலகோடி உயிர்களுக்கு
வழிதந்தாய் உலக மக்கள் சிறப்பு காண
4.காணவே ஞானத்திருவடி என்னும் நூல்
கலியுகத்தை மாற்றிவைக்க தந்தாய் ஐயா
பேணவே இந்நூலை தொடுபவர்க்கு
பேசுகிறேன் சித்தர்களின் ஆசி கிட்டும்
5. ஆசிகிட்டும் பொருள் தந்து பெறுவோர் வாழ்வில்
அற்புதங்கள் நடக்குமையா ஆசியுண்டு ஆசியினால்
குடும்பத்தில் மேன்மையுண்டு
அவரவர்கள் படித்திட மேன்மை காண்பார்
6.காண்பாரே சிறப்பறிவு கூடுமையா
கருணைக்கடல் அகத்தீசர் துணையாய் நிற்பார்
நன்மைபல ஓங்குமையா ஆசியுண்டு
நலம் தரும் நூல் ஞானத்திருவடி நூல்
_______________________________________________________________________
7. ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாம்
ஞாலமதில் (உலகமதில்) அருள்தரும் நூல் ஆசிதரும் நூல்
ஞானம் தரும் நூல் ஞாலம்(உலகம்) காக்கும் நூல்
ஞானம் பெற உணர்ந்துமே படிப்பவர்கள்
8. படிப்பவர்கள் ஞானியாவார் சத்திய வாக்கு
பலன் தரும் நூல் நல்லவளம் தரும் நூல் இது
படிப்பவர்க்கு நல்லவழி சொல்லும் நூல் இது
பரம்பொருளின் அருள் பெற வைக்கும் நூல் இது
9.நூல் இதற்கு திருமூலர் அளித்தேன் ஆசி
நூல்பெற்று அன்பரெல்லாம் மக்களுக்கு ஈய
நல்வழியை உணர்ந்துமே நலன்கள் காண்பார்
நானிலம் சிறக்குமையா உண்மை சொன்னேன்
10.சொன்னேனே கலியுகம் ஞானயுகமாய் மாறும்
சிறப்பு பெற்று உலகமே மகிழும் ஐயா
நன்மை பெற்று மக்களெல்லாம் நலன்கள் காண்பார்
நாட்டினேன் திருமூலர் ஆசி நூல் இப்பாகம் முற்றும் முற்றே.
– சுபம்
01.07.2008
சுவடி ஆசான் V.T.பரணீதரன்,
மகான் அகத்தியர் நாடிஜோதிடர்,
செந்தண்ணீ ர்புரம், திருச்சி.
காலனை (எமனை) வென்றவர், கனகசபாபதியை (தில்லை அம்பலவாணர்) கண்டு தரிசித்தவர் மகான் திருமூலர் ஆவார். ஞானத்திருவடி எனும் நூலில் மகான் பட்டினத்தார் அவர்களின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. ஞானத்திருவடி நூலை வாங்கி பயபக்தியுடன் படிப்பவர்கள் வாழ்வில் சகல நலமும் வளமும் பெற்று வாழ்வார்கள்.
ஞானத்திருவடி எனும் நூலை வாங்கி மற்றவர்கள் படிப்பதற்கு உதவி செய்தால் அதன் மூலம் பட்டினத்தார் ஆசி கிடைக்கும். எனவே இந்நூலை தொடுதல், படித்தல் மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்தும் ஞானவாழ்வு பெறுவதற்கு துணையாக இருக்கும்.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின்
அருள் உரை
(மகான் பட்டினத்தார் பாடல்கள் )
வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே!
– மகான் பட்டினத்தார் பாடல் நெஞ்சொடு புலம்பல்
வீடிருக்கத் தாயிருக்க : கடவுளிற்கு அடுத்ததாக உயர்ந்தவர் தாய், அந்த தாயும் நல்லவீடும்.
வேண்டும்மனை யாளிருக்க: விரும்பியவாறு அழகிய மனைவி இருக்க. சகல செல்வங்களும் உள்ளதால் .
பீடிருக்க: பெருமைக்குரிய வாழ்விருக்க. ஊணிருக்க : பசி ஏற்படும் போதெல்லாம் விரும்பிய உணவு இருக்க.
பிள்ளைகள் : பாசமுள்ள பிள்ளைகளும் இருக்க பிள்ளைகள் என்பதால் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் இருக்க என்று கூறுகின்றார்.
மாடிருக்கக் கன்றிருக்க : பால்பாக்கியத்திற்குரிய பசுமாடு இருக்க கன்று எனக் கூறுவதால் பால்பாக்கியத்திற்கு கன்று அவசியம். கன்றில்லை என்றால் மாடுபால் கறக்காது. அதனால் தான் மாடிருக்க கன்றிருக்க எனக்கூறினார்.
வைத்த பொருளிருக்க : தம் முயற்சியால் ஈட்டிய பொருளும், முன்னோர்கள் சேமித்து வைத்த பொருளும் வேண்டிய அளவிருக்க.
கூடிருக்க : கூடு என்பது உடம்பு. அது சவமாக இருக்க.
மேற்கண்ட அனைத்து செல்வங்களும் அனுபவிக்க வேண்டுமென்றால் உயிர் இருக்க வேண்டும். உயிரில்லை என்றால் பிணம். பிணம் எந்த பொருளையும் அனுபவிக்காது. ஆகவே உயிர் நிலையாமையை பற்றி பேசுவது இந்த பாடல்.
நீபோன கோலமென்ன கோலமே : யாருக்குமே தெரியாதவாறு உயிர்போய்விட்டது.
உயிரும் உடலும் நலமாக உள்ள போதே கடவுளை அடையதக்க ஆசானை நாடி உயிரை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். உயிர்
_______________________________________________________________________
நிலைத்து நின்றால் எல்லா செல்வங்களையும் பெற்று எல்லா நலமும் வளமும் பெறலாம். எனவே உயிரை ஆசான் துணையோடு நிலைப்படுத்திக்கொண்டால் அதுவே சிறப்பறிவாகும். உயிரை நிலைப்படுத்தி கொள்கின்றவன் நிச்சயம் உடம்பையும் நிலைப்படுத்தி கொள்வான். எனவே உயிரையும் உடம்பையும் பற்றி அறிவதே ஞானமாகும். உயிர் போனபின் பிணமென்ற பெயர் எடுக்கும் இந்த உடம்பு. உடம்பையும் உயிரையும் நிலைப்படுத்திக் கொள்பவர் சிறப்பறிவாளர் ஆவார். உயிரையும் உடம்பையும் அறிவதற்கு மகான் பட்டினத்தார் திருவடியை பூசிக்க வேண்டும்; பூசித்து ஆசிபெற வேண்டும். மகான் பட்டினத்தார் அவர்கள் உடம்பையும் உயிரையும் நிலைப்படுத்திக் கொண்ட வல்லமை பெற்றவர் ஆவார். அவர் ஆசியில்லாமல் உடம்பையும் உயிரையும் நாம் அறிந்துகொள்ள முடியாது. உயிரைப்பற்றியும் உடம்பை பற்றியும் அறிந்தவன் உண்மை ஞானி ஆவான். இதற்கு மகான் பட்டினத்தார் ஆசி வேண்டும்.
மகான் பட்டினத்தார் திருவடிகளை யார் பூசிக்கிறார்களோ அவர்கள் மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற மகான் பட்டினத்தார் ஆசிபெற வேண்டுமென்றால் உயிர்கொலை த புலால் மறுத்தும், பசித்த ஏழைகளுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்தும் காலை மாலை பட்டினத்தார் திருவடியை பூசித்தும் காலை 20 நிமிடமும் மாலை 20 நிமிடமும் முடிந்தால் இரவு 12 மணிக்கு 20 நிமிடமும் நாமஜெபமாகிய அதாவது “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று பூசித்து வந்தால் முன் செய்த பாவங்கள் அனைத்தும் பொடிப்பட்டு போகும்.
ஆக பூசிக்க பூசிக்கத்தான் அதாவது நாமஜெபம் செய்ய செய்ய நம்முள் மகான் பட்டினத்தார் தங்கியிருந்து உண்மை பொருளை உபதேசிப்பார். அவர் ஆசியால் உடல் மாசு நீங்கும். உயிர் மாசு நீங்கும். உடல் மாசும் உயிர்மாசும் நீங்கினால் இந்த தேகம் அழியாது. அதுவே மனிதன் அடையக்கூடிய வீடுபேறாகும் அல்லது மோட்சமாகும். எனவே பக்தியே முக்தி சித்தி தரும். முற்றுபெற்ற முனிவராகிய மகான் பட்டினத்தார் திருவடியை யார் பூசித்தாலும் இந்த வாய்ப்பை பெறுவார்கள்.
மகான் பட்டினத்தார் மரணத்தை வென்ற மாமுனிவராவார். நாம் எதைக் கேட்டாலும் இல்லையென்று சொல்லாத வல்லவராவார். பட்டினத்தார் என்றாலே காலன் அஞ்சி நடுங்குவான். அதேபோல வினைகளும் அஞ்சி நடுங்கும். வினைகள் தான் மீண்டும் மீண்டும் பிறவிக்கு காரணமாக அமையும். அந்த வினைகளை ஆசான் பட்டினத்தார் உடைத்தெறிந்து நம்மை காத்து இரட்சிப்பார். அழைத்துப் பாருங்கள் ! “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று உண்மையை உணர்வீர்கள் !
குறிப்பு: அவர் நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் வறுமை இருக்காது; நோய் இருக்காது; அச்சமென்ற பேச்சிற்கே இடமில்லை எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
***************************
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து
பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே.
– மகான் பட்டினத்தார் பாடல், நெஞ்சோடு புலம்பல் – 16.
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான ……
கொல்லர்கள் பயன்படுத்தும் காற்றுத் துருத்தி போன்று இந்த உடம்பு. அதாவது கொல்லுப்பட்டறை வைத்திருப்பவர் காற்றுத் துருத்தியை பயன்படுத்துவார்கள். அவர்கள் இயக்கினால் காற்றுத் துருத்தி இயங்கும். அதேபோல் கடவுள் நம்மை இயக்கினால் இயங்கிக்கொண்டிருப்போம். கொடிய வினையுள்ளவர்களுக்கு க .
ஊற்றைச் சடலத்தை ……
பெண்பாலுள்ள சுரோணிதமும் ஆண்பாலுள்ள சுக்கிலமும் உடல் சேர்க்கையால் கருப்பைக்குள் சுக்கில சுரோணிதம் தங்கி குழந்தையாக உருவெடுக்கும். அதாவது பத்துமாதம் துர்நாற்றமுள்ள தீட்டு வெளியாகாமல் இந்த உடம்பை உருவாக்கும். ஆக சுக்கில சுரோணிதமும் துர்நாற்றமுடையதே! பத்துமாத தீட்டும் துர்நாற்றமுடையதே! இந்த மூன்று வகை துர் நாற்றமும் சேர்ந்து குழந்தையாக வருவதால் ஊற்றை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். ஊற்றை என்றாலே அருவெறுக்கத்தக்க சொல்லாகும். அடுத்த வினாடி நாம் உயிரோடு இருப்போமா? என்றால், நமக்கே தெரியாது. சிலருக்கு உடல் திடகாத்திரமாக இருக்கும். ஆகவே தன் உடம்பை பார்த்து பெருமிதம் கொள்வார்கள். அடுத்த வினாடி என்ன ஆகுமோ? என்று தெரியாது. இது போன்ற அநித்திய உடம்பை நித்தியமென்று பெருமிதத்தோடு இருந்தால் அதுவே அறியாமை ஆகும். எனவே மகான் பட்டினத்தார் ஆசி இருந்தால் அநித்தியத்தை நித்திய மென்று எண்ணமாட்டான். எனவே நித்தியத்தையும் அநித்தியத்தையும் அறிவதே சிறப்பறிவாகும். அது மகான் பட்டினத்தார் ஆசி இருந்தால் தான் உணரமுடியும்.
____________________________________________________________________________
பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
பார்த்திரங்கி என்பது பொருள் நிலையாமை, உயிர், உடல் நிலையாமை இவற்றைப்பற்றி ஆராய்ந்து பார்த்தல் என்றும், தன்னிலையை ஆராய்ந்து பார்த்தும் வருகின்றவர் முகத்தை பார்த்து பரிவுகாட்டி உணவளித்தல் என்றும் கொள்ளலாம். அறத்தின் இயல்பை ஆராய்ந்து பார்த்தவர்கள் காலம் உள்ள போதே அறப்பணி செய்து புண்ணியத்தை தேடிக்கொள்வார்கள். பார்த்து என்பது பொருள் நிலையாமை என்பதை அறிந்து பொருள் இருக்கும் போதே பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி ஜென்மத்தை கடை தேற்றிக் கொள்ள வேண்டும். அதாவது, பொருள் நிலையாமையை அறிந்தவன் பசித்த ஏழைகள் பால் இரக்கம் காட்டி பசித்த ஏழைகளுக்கு பசியாற்றவேண்டும். நிலையில்லாத பொருள் நமது கைக்கு வரும்போது நிலையான அறப்பணி செய்துக் கொள்ள வேண்டும். அதுதான் சிறப்பு அறிவாகும்.
ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே
ஆற்றுவெள்ளம் அமைதியாக ஓடாது. மனமும் அதுபோல் அங்குமிங்கும் அலையக்கூடாது. அதை நிலைப்படுத்தி ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும். ஆற்றுவெள்ளம் தடுமாறி ஓடுவதுபோல் நெஞ்சம் தடுமாறுகிறாயே என்று தன் மனதிற்கு உபதேசிக்கிறார்.
இந்த பாடல் பொருள் நிலையாமையையும் உடல் நிலையாமையையும் பற்றி பேசுவதாகும். ஆகவே பொருளுள்ள போதே பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும். அதுவே பொருளால் அடைகின்ற புண்ணியமாகும். உடல் இருக்கும் போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும்; ஆசான் பட்டினத்தார் ஆசி இல்லாமல் இது கைகூடாது.
குறிப்பு: ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்கள் உண்மைப் பொருளுணர்ந்த ஆசான் பட்டினத்தார் துணை கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தி விடா முயற்சியை மேற்கொண்டு ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
*********************
அன்னம் பகிர்ந்திங் கலைந்தோர்க் குதவி செயுஞ்
ஜென்ம மெடுத்துஞ் சிவனருளைப் போற்றாமல்
பொன்னும் மனையுமெழிற் பூவையரும் வாழ்வுமிவை
இன்னுஞ் சதமாக எண்ணினையே நெஞ்சமே!
– மகான் பட்டினத்தார் பாடல் நெஞ்சோடு புலம்பல் 4.
அன்னம் பகிர்ந்திங் கலைந்தோர்க் குதவிசெயுஞ்
ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்பும் ஆன்மீகவாதிகள் பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுப்பதே தன் கடமையாக எண்ணவேண்டும். அப்போதுதான் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியும்.
ஜென்மமெடுத்துஞ் சிவனருளைப் போற்றாமல்
பசியாற்றக்கூடிய எண்ணம் உள்ளவர்கள் நிச்சயம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள். மனிதனாக பிறந்தால் கடவுள் உண்டென நம்பி திருவடியை பூசிக்க வேண்டும்.
பொன்னும் மனையுமெழிற் பூவையரும் வாழ்வுமிவை
ஆபரணங்களும், வீடும், அழகுடைய மனைவியும் இன்னும்பல வசதிகள் அடங்கிய வாழ்வும் நிலையானது அல்ல, ஈசன் திருவடியை பூசிப்பதே நிலையானதாகும்.
இன்னுஞ் சதமாக எண்ணினையே நெஞ்சமே
மேற்கண்ட அனைத்தும் அநித்தியமே. ” இதை நிலையாக எண்ணாதே; நிலையாக எண்ணுவது அறியாமையாகும்” என்று தன் மனதிற்கு உபதேசிக்கிறார் மகான் பட்டினத்தார். தன் மனதிற்கு உபதேசித்தாலும் உலக மக்களும் இந்த கருத்தை பின்பற்றலாம்.
**********************
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சற்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
– மகான் பட்டினத்தார் பாடல் நெஞ்சோடு புலம்பல் 12.
இந்த உடல் அநித்தியமென்றும், துர்நாற்றம் உள்ளதென்றும், ஒருநாள் குளிக்காவிட்டாலும் உடலில் துர்நாற்றம் ஏற்படும் என்றும், இது நிலையில்லாதது என்றும் சிலபேர் நினைப்பார்கள். அதை மற்றவர்களுக்கு போதித்தும் வருவார்கள். ஆனால் சுத்தமும் அசுத்தமுமாகிய இந்த உடம்பினுள்ளே கடவுள் தங்கியிருக்கின்றார். அசுத்தமாகிய தூல தேகம் நீங்கினால் சுத்தமாகிய சூட்சம் தேகத்தில் சதகோடி சூரியன் போல் ஒளி வடிவாக இருக்கின்றார் கடவுள்.
அந்த கடவுளை அடைவதற்கு தூலதேகத்தையும் சூட்சம தேகத்தையும் அறிந்த மகான் பட்டினத்தார் அவர்கள் திருவடியை பூசித்தால் தூல தேகத்திலுள்ள களிம்பை நீக்கி மிக்க ஒளி பொருந்திய கடவுளை அதாவது
ஜோதி பிழம்பாக இருக்கக்கூடிய கடவுளை தரிசித்து அநித்தியமாகிய இந்த உடலை நிலைநிறுத்தி கொள்ளலாம். மேலும், பலகோடி யுகங்கள் வாழலாம்.
மகான் பட்டினத்தார் அவர்கள் திருவடியை உண்மையுடன் உருகி பூசித்தால் அவர் பெற்ற அனைத்தையும் நாம் பெறுவதோடு, அவர் மனமிரங்கி நமக்கு உயிர்மாசையும் உடல்மாசையும் பற்றி உபதேசித்து உடல் மாசு நீங்கினால் உயிர்மாசு நீங்கும். அப்போது சீவன் சிவலிங்கமாகும். ஆக குருபக்தியே உடம்பையும் உயிரையும் அறிந்து உடல் மாசை நீக்கி நம்மை ஒளி உடம்பாக்கி தருவார் மகான் பட்டினத்தார். ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்கள் குரு அருளைப் பெறவேண்டும். அந்த குருவும் தன் நிலையை தான் உணர்ந்து தன் உடம்பை ஒளி உடம்பாக்கி கொண்டவர்களாக இருக்க வேண்டும். தன் உடம்பை ஒளி உடம்பாக்கிக் கொண்டவர்தான் மகான் பட்டினத்தார். மகான் பட்டினத்தாரை “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று தொடர்ந்து எவரொருவர் பூசித்து வருகின்றாரோ அவர் முன் செய்த பாவங்களை நீங்க செய்து தான் அடைந்த பேரின்பத்தை அவனை அடையச்செய்து ஈடு இணையில்லா பெருவாழ்வு தருவார். மகான் பட்டினத்தாரை அறிவதற்கும் அவரது திருவடியை பூசிப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியவானாகிய பட்டினத்தார் திருவடியை பூசித்தாலே நாமும் புண்ணியவானாகலாம். மகான் பட்டினத்தார் திருவடிகளை தினம் பூஜிப்பவர்கள் சிந்தையில் மகான் பட்டினத்தார் தங்கி எல்லா குணக்கேடுகளையும் நீக்கி உயர்ந்த சிந்தை உள்ளவர்களாக மாற்றுவார். ஆக ஞானிகளெல்லாம் அறக்கடலாக இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பூசித்து ஆசி பெறலாம்.
மகான் பட்டினத்தார் திருவடியை பூசிப்பவர்களுக்கு பொல்லாத வறுமையோ, நோயோ இன்னும்பல இடர்கள் அணுகாது நம்மை காத்து இரட்சிப்பார். இத்தகைய பெருமைக்குரிய மகான் பட்டினத்தாரை பூசிக்காமல் உலக நடையில் பொன்னையும் பொருளையும் நம்பி சற்குருவாகிய மகான் பட்டினத்தார் திருவடிகளை பற்றாவிடில் எமன் நம்மை கொன்று விடுவான். எனவே அற்புதமாகிய இந்த உடல் அழிவதற்கு முன் சற்குருவாகிய மகான் பட்டினத்தார் திருவடியை பூசித்து ஆசிபெற வேண்டும். எனவே இந்த அற்புதமான உடல், அழியுமுன்னே பெரியோர் திருவடியை பற்றி பூசித்து ஜென்மத்தை கடைத்தேற்றி கொள்ளவேண்டும்.
குறிப்பு 1 : நிலையில்லாத பொருளை நிலையென்று நம்பி மயங்குகின்ற அறியாமை நீங்கும்.
குறிப்பு 2 : மனித வாழ்க்கை, பாம்பு பற்றிக்கொண்ட தவளை மீளாதது போல் நாமும் மரணத்தினின்று தப்பமுடியாது. மகான் பட்டினத்தார் திருவடியை பூசிப்பவருக்கு என்றும் மரணமில்லை, என்றும் அழியாத வாழ்வை பெறுவார்கள்.
“ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி”
என்றால்
ஆசான் அகத்தீசரின் சீடர்களான நவகோடி சித்தர்களும்
நமக்கு துணையாக இருந்து ஆசான் அகத்தீசர் திருவடியில்
நம்மை சேர்த்து விடுவார்கள்
என்னுடைய பேர்சொல்லில் கூட்டிக்கொண்டு
இசைவான பொதிகையிலே ஏறுவார்பார்
உன்னுடைய திறங்கண்டபோது தானே
யுறுதியுள்ள சித்தனென்று பேரும்ஈய்வேன்
மின்னுடைய ஒளிகாட்டி அறுதலமும்காட்டி
மெய்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாலிப்போம் அஷ்டாங்கம் பரிந்துகாணே.
– அகத்தீசர் பூரண சூத்திரம் 216-ல் 97.
மேற்கண்ட கவியின் சாரம் :
அடியார்களுக்கு ஆசான் அகத்தீசர் மனமுவந்து அருளிய உபதேசமாகும்.
“ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” என்று என் பெயரைச்சொல்லி அழைத்தால், எனது சீடர்களாகிய ஒன்பது கோடி பேரும், அழைத்தவரை சூழ்ந்திருந்து, அவர் விரும்பியதெல்லாம் முடித்து வைப்பதோடு மட்டுமல்லாது, என்னுடைய மலையாகிய பொதிகைக்கு “ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” என்று அழைத்தவரை என்னிடம் அழைத்துவருவார்கள்.
நீ மேற்கொள்ளும் தவத்தின் வைராக்கியத்தைக் கண்டுதான் உன்னை சீடனாக நான் ஏற்றுக் கொள்வேன்.
அதுமட்டுமல்லாது, உன்னுள் அடங்கியுள்ள ஜோதியை, நான் உள்ளிருந்து, நீ ஜோதியைக் கண்டு மகிழும்படி அருள் செய்வேன்.
மேலும், ஆறாதார இயல்பையும், ஐம்பத்தோரு அட்சரமும், மெய்ஞான வீட்டையும் நீ அடையும்படி செய்வேன். மேலும், சிதம்பர இரகசியத்தையும் உனக்கு உணர்த்தி அருள் செய்வேன் மற்றும் அஷ்டமா சித்துக்களையும் தருவேன்.
எனவே, என்னுடைய பெயரை தினமும் சொல்லி, நீ ஜென்மத்தைச் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்று மனமுவந்து மேற்கண்ட பாடலைப் பாடியுள்ளார்கள்.
சன்மார்க்கப் பயிற்சி (தொடர் )
ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருள் சக்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகுதல் வேண்டும்.
இரக்கம் ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய முடியும். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அவசியம் பின்பற்றி வாழவேண்டும். ஒழுக்கம் இல்லையேல் உண்மை இரக்கம் கைக் கூடாது. எனவே ஒழுக்கத்தை பின்பற்றுவதே உண்மையான வழிபாடாகும்.
தினசரி நாம் இரவில் உறங்குவதற்கு முன்னர் எந்த எந்த ஒழுக்கத்தை பின்பற்றி வந்தோம். எந்த ஒழுக்கத்தை பின்பற்ற இயலவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அந்த ஒழுக்கத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். முயற்சித் திருவினையாக்கும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை .
முதலில் சன்மார்க்க ஒழுக்கங்களை இயன்றவரைப் பின்பற்றுதல் வேண்டும். ஒருவாறு பழக்கத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பலகால் பழகவேண்டும். இவ்வாறு பழகி அனுபவத்திற்கு வந்த பின்னர் தீவிர முயற்சி மேற்கொண்டு இடையறாது எப்போதும் ஒழுக்கத்தில் நிற்க பழகுதல் வேண்டும்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்னும் மகா மந்திரத்தை ஓதிக்கொண்டு இன்றே, இப்பொழுதே சன்மார்க்கப் பயிற்சியை தொடங்குங்கள். பேரானந்தப் பெருவாழ்வை நமக்கு வழங்கப் பெருமானார் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆண்டு மாதம் தேதி 1 2 3 4
28. சைவ ஆகாரம் மட்டுமே உட்கொள்ளுதல்
29. பகலில் உறங்காது இருத்தல்
30. காலை, மதியம், இரவு, இரண்டு
மணிநேரம் வீதம் தியானம் செய்தல்
31. இடது கை பக்கமாகப் படுத்து உறங்க
வேண்டும்.
32. மனதை புருவமத்தியில் நிற்கச் செய்தல்
33. துர்விசயத்தைப் பற்றாது இருத்தல்
34. பிறர் குற்றம் விசாரியாது இருத்தல்
35. தன்னைமதியாது இருத்தல்
36. ஜாதி, மதம் பாராட்டாது இருத்தல்
37. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல்
நினைந்து நடத்துதல்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள்அருளிய அருட்பாவின் அமுத கலசமான ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் தெய்வீக நூலை யார் படிக்கிறார்களோஅவர் ஞானியாவார் என்பது சாத்தியம். – குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் |
துறையூர்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
அன்னை மருத்துவமனை
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
மற்றும்
திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்துடன்
இணைந்து நடத்தும்
(இலவச கண் சிகிச்சை முகாம்)
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
நாள் : 12.7.2008, 09.08.2008 சனி (பிரதி மாதம் 2ம் சனி)
நேரம் : காலை 8.30 மணிமுதல் 12.00 மணிவரை
கண்ணில் சீழ் வடிதல், தூரப்பார்வை குறைவு, கிட்டப்பார்வை, சதை வளர்ச்சி, பார்வை மங்கல், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், கண்புரை நோய், தலைவலி மேலும் I.O.L. லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் – 94434 21935****************************ஞானிகள் திருஉருவப்படங்கள்மற்றும் ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்குந.நடராஜன், கொள்கை பரப்பாளர், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.(() 04327-255784, செல்: 98947 55784 |
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
-குறள் 226.
குருவருள் வேண்டி –
கணேஷ் ஹார்டுவேர்ஸ்
& அலுமினியம்,
No.72A – 100 அடி ரோடு, வடபழனி, சென்னை – 600 026.
Cell : 98400 – 20828.
0 044 – 23651284, 23652568.
“அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54– தெற்கு சிவன் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026.
( 044-24720499, 23721160.
_____________________________________________________________________
மகான் அம்பிகானந்தர்
டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்
பெருமான் போனில் தெரு, பிரசன்ன மஹால் lin,
துறையூர்.
JOHNSON Regency Parryware Neycer
ASR.ராஜா
98435 68696
S.திருமுகம்
98431 58696
லட்சுமி கிரில் டிசைன்ஸ்
குரு அருள் வேண்டி….
NOKIA Priority DEALER’S
NOKIA Care
எல்லா மாடல் நோக்கியா
செல்போன்களும் இங்கு கிடைக்கும்.
மற்றும் எல்லா மாடல் நோக்கியா
செல்போன்களும் பழுது நீக்கப்படும்.
Silphone #9, Ground Floor, TABS Complex,
Cantonment, Trichy 620 001.
______________________________________________________________________
ஞானத்திருவடி – மாத இதழ்
சந்தா படிவம்
11 வருட சந்தா
ரூ.120/
3 வருட சந்தா
ரூ.350/
திரு/திருமதி. :
முகவரி :
பின்கோடு
போன்
: (வீடு)
– (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் DD வரைவோலை
MO-மணியார்டர் காசோலை (Cheque) Rs.50/-Extra
* காசோலை/வரைவோலையை Sri Agathiar Sanmaarga Charitable Trust
என்ற பெயரில் எடுக்கவும்.
* வரைவோலையை payable at Trichy (or) Thuraiyur என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.ஞானத்திருவடி – மாத இதழ்ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம். |
அகத்தியர் துணை
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம். காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்திகா வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்இரா.மாதவன், ஓங்காரக்குடில், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621010,திருச்சி மாவட்டம். செல்: 98424 55661அச்சிட்டோர் : வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர். |
______________________________________________________________________
அறம் செய விரும்பு
பட்டினத்தார் திருவடிகள் போற்றி
பட்டினத்தார் படம்
பற்றிய பற்றை பற்றர செய்த அருள் பட்டினத்தார்
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய
சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை
ஞானத்திருவடி மாத இதழ்
உங்கள் இல்லம் தேடிவர சந்தாதாரராகுங்கள்
_______________________________________________________