அக்டோபர் 2017 – 22.09.1997 அன்று அருளிய “சன்மார்க்கத்தில் யோகநெறி” – குருநாதர் அருளுரை – OCTOBER 2017

 

அகத்தியர் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

 

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை ஹேவிளம்பி ஐப்பசி (அக்டோபர் – 2017)

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

 

உள்ளடக்கம்

 

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பின் சிறப்பு

2. சித்தர்கள் போற்றித் தொகுப்பு

3. 22.09.1997 அன்று அருளிய சன்மார்க்கத்தில் யோகநெறி – குருநாதர் அருளுரை

4. பிழைபடச் சொல்லேல் (ஆத்திசூடி) – குருநாதர் அருளுரை

 

வருகவே கலிகால மக்களே

வணங்கி அரங்கன் வழிமுறையை

முருகா என்று ஏற்றுவிட்டால்

முடிவுறும் மக்களாட்சி உலகில்

 

உலகினில் ஆறுமுகன் ஆட்சி

உதயமாகும் சடுதி இனிதே

உலகமதில் இவை மாற்றம் பெற

உலகமக்களே அரங்கன் காட்டும்

 

காட்டுகின்ற தரும் பாதை முறை

கட்டாயம் ஏற்று வருதல் காண

நாட்டினில் ஞான ஆட்சி உறுதி

நல்லோர்கட்கும் பதவியும் பாதுகாப்பும் உறுதி

மகான் தேரையர் ஆசிநூல்.

 

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தைக் கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்பிரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

 

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 40 ஆண்டு காலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்அவர்கள், ஞானிகளின் பாடல்களில், தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

விரைவில் எதிர்பாருங்கள் அற்புதமான ஞானயுகம் அமைகின்றதை!

அன்புடன் – இரா.மாதவன்.

 

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

பாவபரிகாரமும் சாபவிமோசனமும் பெற்றுத்தரவல்ல அற்புத பாராயண நூல்

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

 

ஞானிகள் அத்துணைபேரும் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு மும்மலக் குற்றத்தை வேருடன் அறுத்து வெற்றி கண்டவர்கள். அவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை. நரை, திரை, மூப்பு இல்லை. சித்தர்கள் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றவர்கள். இவர்களின் திருவடிகளை பூஜித்தாலே நாம் செய்த பாவங்களெல்லாம் நீங்கிவிடும். பாவங்களுக்கு காரணமான உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல், வரவுக்கு மீறிய செலவு செய்தல் இன்னும்பல தீவினை செயல்களெல்லாம் கீழ்க்கண்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்தால் நீங்கிவிடும். பெருமைக்குரிய சித்தர்கள் போற்றித் தொகுப்பை ஒரு தீபம் ஏற்றி வைத்து பயபக்தியுடன் பணிந்து வணங்கி பாராயணம் செய்தால் இல்லறமும் சிறக்கும், வீடுபேறாகிய ஞானமும் கைகூடும்.

 

கல்வி கற்கும் மாணவர்கள் தினசரி பாராயணம் செய்தால், கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறுவதோடு நல்ல வேலை வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.

ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பானது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான பாராயண நூலாகும்.

 

எதை விரும்பி சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாராயணம் செய்கிறீர்களோ அதை அப்படியே பெற்றுத் தரவல்ல அற்புதமான பாராயண நூல் சித்தர்கள் போற்றித் தொகுப்பாகும். சித்தர்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்து மனிதகுலத்திற்கு பொதுவானவர்கள். ஆதலினால் சித்தர்கள் போற்றித் தொகுப்பை எல்லா சமயத்தினரும், எல்லா நாட்டினரும், பேதாபேதமின்றி பாராயணம் செய்யலாம். ஆண், பெண், குழந்தைகள், பெரியோர், குடும்பஸ்தன், துறவி, பஞ்சபராரிகள், ஏழை எளியோர் என யாவரும் பாராயணம் செய்யலாம். கணவனை இழந்தவர்களும் தடையின்றி விளக்கேற்றி பாராயணம் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை, எந்த சடங்குகளும் இல்லை.

 

அற்புதம் வாய்ந்த இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை பல கோடி பேர் பாராயணம் செய்து எண்ணற்ற பலன்களை அடைந்ததோடு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்திடவும், வேண்டுகோள்கள் நிறைவேறி மனம் மகிழ்ந்ததும், இவ்வுலகம் கண்ட அற்புத உண்மையாகும். இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை இன்னும் பலகோடி மக்கள் பாராயணம் செய்து மேன்மை அடைவார்கள் என்பது ஞானிகள் வாக்காகும்.

 

இதுவரையிலும் ஞானவாழ்வு அடைவதற்கு துணையாக இருந்ததும், இனி அடையப்போகின்றவர்களுக்கும் சித்தர்கள் போற்றித் தொகுப்பு துணையாகும் என்பது சத்திய வாக்காகும்.

துவக்கப்பாடல்

 

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

திருமந்திரம் : திருவடிப்பேறு1598

 

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,

சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்

தொகுத்து வழங்கிய

 

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

 

ஓம்

அகத்தியர்

திருவடிகள் போற்றி

ஓம்

அகப்பைச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

அசுவினித்தேவர்

திருவடிகள் போற்றி

ஓம்

அத்திரி மகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

அநுமான்

திருவடிகள் போற்றி

ஓம்

அம்பிகானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

அருணகிரிநாதர்

திருவடிகள் போற்றி

ஓம்

அருள்நந்திசிவாச்சாரியார்

திருவடிகள் போற்றி

ஓம்

அல்லமாபிரபு

திருவடிகள் போற்றி

ஓம்

அழுகண்ணிச்சித்தர்

திருவடிகள் போற்றி

10

ஓம்

இடைக்காடர்

திருவடிகள் போற்றி

ஓம்

இராமலிங்கசுவாமிகள்

திருவடிகள் போற்றி

ஓம்

இராமதேவர்

திருவடிகள் போற்றி

ஓம்

இராமானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

உமாபதி சிவாச்சாரியார்

திருவடிகள் போற்றி

ஓம்

ஒளவையார்

திருவடிகள் போற்றி

ஓம்

கஞ்சமலைச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கடைப்பிள்ளைச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கடுவெளிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கண்ணானந்தர்

திருவடிகள் போற்றி

20

ஓம்

கண்ணிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கணநாதர்    

திருவடிகள் போற்றி

ஓம்

கணபதிதாசர்

திருவடிகள் போற்றி

ஓம்

கதம்பமகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

கபிலர்

திருவடிகள் போற்றி

ஓம்

கமலமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

கருவூர்தேவர்

திருவடிகள் போற்றி

ஓம்

கல்லுளிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கலைக்கோட்டு முனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

கவுபாலச்சித்தர்

திருவடிகள் போற்றி

30

ஓம்

கனராமர்

திருவடிகள் போற்றி

ஓம்

காகபுஜண்டர்

திருவடிகள் போற்றி

ஓம்

காசிபர்

திருவடிகள் போற்றி

ஓம்

காலாங்கிநாதர்

திருவடிகள் போற்றி

ஓம்

குகைநமச்சிவாயர்

திருவடிகள் போற்றி

ஓம்

குதம்பைச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

குமரகுருபரர்

திருவடிகள் போற்றி

ஓம்

குருதட்சணாமூர்த்தி

திருவடிகள் போற்றி

ஓம்

குருராஜர்

திருவடிகள் போற்றி

ஓம்

குறும்பைச்சித்தர்

திருவடிகள் போற்றி

40

ஓம்

கூர்மானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

கொங்கணேஸ்வரர்

திருவடிகள் போற்றி

ஓம்

கோரக்கர்   

திருவடிகள் போற்றி

ஓம்

கௌசிகர்

திருவடிகள் போற்றி

ஓம்

கௌதமர்

திருவடிகள் போற்றி

ஓம்

சங்கமுனிச் சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சங்கர மகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

சங்கிலிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சச்சிதானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சட்டநாதர்

திருவடிகள் போற்றி

50

ஓம்

சண்டிகேசர்

திருவடிகள் போற்றி

ஓம்

சத்யானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சிவயோகமாமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

சிவவாக்கியர்

திருவடிகள் போற்றி

ஓம்

சிவானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சுகப்பிரம்மர்

திருவடிகள் போற்றி

ஓம்

சுந்தரானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

சுந்தரமூர்த்தி

திருவடிகள் போற்றி

ஓம்

சூதமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

சூரியானந்தர்

திருவடிகள் போற்றி

60

ஓம்

சூலமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

சேதுமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

சொரூபானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஜம்பு மகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

ஜமதக்னி

திருவடிகள் போற்றி

ஓம்

ஜனகர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஜனந்தனர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஜனாதனர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஜனக்குமாரர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஜெகநாதர்

திருவடிகள் போற்றி

70

ஓம்

ஜெயமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

ஞானச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

டமாரானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

தன்வந்திரி

திருவடிகள் போற்றி

ஓம்

தாயுமான சுவாமிகள்

திருவடிகள் போற்றி

ஓம்

தானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

திரிகோணச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

திருஞானசம்பந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

திருநாவுக்கரசர்

திருவடிகள் போற்றி

ஓம்

திருமாளிகைத் தேவர்

திருவடிகள் போற்றி

80

ஓம்

திருமூலதேவர்

திருவடிகள் போற்றி

ஓம்

திருவள்ளுவர்

திருவடிகள் போற்றி

ஓம்

தூர்வாசமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

தேரையர்

திருவடிகள் போற்றி

ஓம்

நந்தனார்

திருவடிகள் போற்றி

ஓம்

நந்தீஸ்வரர்

திருவடிகள் போற்றி

ஓம்

நாதாந்தச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

நாரதர்

திருவடிகள் போற்றி

ஓம்

நொண்டிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

பட்டினத்தார்

திருவடிகள் போற்றி

90

ஓம்

பத்ரகிரியார்

திருவடிகள் போற்றி

ஓம்

பதஞ்சலியார்

திருவடிகள் போற்றி

ஓம்

பரத்துவாசர்

திருவடிகள் போற்றி

ஓம்

பரமானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

பராசரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

பாம்பாட்டிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

பிங்களமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

பிடிநாகீசர்

திருவடிகள் போற்றி

ஓம்

பிருகுமகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

பிரும்மமுனிவர்

திருவடிகள் போற்றி

100

ஓம்

பீர்முகமது

திருவடிகள் போற்றி

ஓம்

புண்ணாக்கீசர்

திருவடிகள் போற்றி

ஓம்

புலத்தீசர்

திருவடிகள் போற்றி

ஓம்

புலிப்பாணிச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

பூனைக்கண்ணார்

திருவடிகள் போற்றி

ஓம்

போகமகாரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

மச்சமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

மஸ்தான்

திருவடிகள் போற்றி

ஓம்

மயூரேசர்

திருவடிகள் போற்றி

ஓம்

மாணிக்கவாசகர்

திருவடிகள் போற்றி

110

ஓம்

மார்க்கண்டேயர்

திருவடிகள் போற்றி

ஓம்

மாலாங்கன்

திருவடிகள் போற்றி

ஓம்

மிருகண்டரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

முத்தானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

மெய்கண்டதேவர்

திருவடிகள் போற்றி

ஓம்

மௌனச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

யாகோபு

திருவடிகள் போற்றி

ஓம்

யூகிமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

யோகச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

யோகானந்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

ரோமரிஷி

திருவடிகள் போற்றி

121

ஓம்

வசிஷ்டமகரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

வரதரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

வரரிஷி

திருவடிகள் போற்றி

ஓம்

வராகிமிகி

திருவடிகள் போற்றி

ஓம்

வால்மீகி

திருவடிகள் போற்றி

ஓம்

விசுவாமித்திரர்

திருவடிகள் போற்றி

ஓம்

வியாக்ரமர்

திருவடிகள் போற்றி

ஓம்

வியாசமுனிவர்

திருவடிகள் போற்றி

ஓம்

விளையாட்டுச்சித்தர்

திருவடிகள் போற்றி

ஓம்

வேதாந்தச்சித்தர்

திருவடிகள் போற்றி

131

ஓம்

எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்

திருவடிகள் போற்றி போற்றி

 

 

 

நிறைவுப்பாடல்

 

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி

வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்

வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்

வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

திருமந்திரம் 3047

 

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

 

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!

ஓங்காரக்குடிலில் நடைபெறும்அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடிநூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

 

 

 

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

திருச்சி மாவட்டம், துறையூர், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில்

சன்மார்க்கத்தில் யோகநெறி

என்ற தலைப்பில் 22.09.1997 அன்று அருளிய

 

அருளுரை

 

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

 

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, வணக்கம்.

நாம் ஒவ்வொரு நாளும் சுத்த ஆன்மீகத்தைப் பற்றி பேசி வருகிறோம். சுத்த ஆன்மீகம் என்று சொல்லும்போதே, அழுக்குள்ள ஆன்மீகம் ஒன்று இருக்கிறது என்பது உண்மைதான். பக்தியில் மூடபக்தி, உண்மைபக்தி இருப்பது போல, ஆன்மீகத்திலும் சுத்த ஆன்மீகம், அசுத்த ஆன்மீகம் உள்ளது.

 

மனிதர்கள் அத்தனைபேரும் அசுத்தமானவர்கள்தான். என்ன காரணம்? இயற்கை தோற்றுவிக்கும்போதே நமக்கு இந்த மருந்தை, நச்சுத்தன்மையான தேகத்தை படைத்து வைத்திருக்கிறது. நச்சுத்தன்மையான உடம்பு நமக்கு அழுக்கு உடம்புதான். அந்த உடம்பைப்பற்றி அறியும் வரையில் அது நமக்கு அழுக்கு. அந்த உடம்பை, உடம்பின் இயல்பை ஞானிகள் ஆசியால்தான் அறிந்துகொள்ள முடியும்.

 

அசுத்த தேகம், அசுத்த ஆன்மீகம்.

சுத்த தேகம், சுத்த ஆன்மீகம்.

சுத்த தேகம் நமக்கு மரணமில்லாப் பெருவாழ்வை தரக்கூடிய தேகம். சுத்த தேகம் என்பது, தாய்தந்தையால் எடுத்த காமதேகத்தை பொடியாக்கிய தேகம். இதுதான் சிறந்த வல்லமை. இந்த வாய்ப்பு ஆசான் ஆசி இருந்தால்தான் முடியும், இல்லையென்றால் சுத்ததேகத்தை பெற முடியாது. அதைப் பெறுவது ரொம்ப கடினம்தான்.

 

அசுத்த தேகம் உள்ளவர்களுக்கு சிந்தனை தடுமாறும். அந்த சிந்தனை தடுமாறும்போது ஆசானை அழைத்து நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்க வேண்டும். அசுத்த தேகத்தால் நம் சிந்தனை தடுமாறும். அசுத்த தேகம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு இல்லையா? இருக்கிறது.

 

சுத்த தேகம் உள்ளவர்கள் பற்றற்றவர்கள் ஆவார்கள். பற்றற்றவர்கள் என்று சொன்னாலே ஆசை இல்லாதவர் என்று பொருள். அங்கே ஒன்றும் இருக்காது. அங்கே காமவிகாரமே இருக்காது. காமவிகாரத்தை வெல்வதற்கு தினம்தினம் ஆசானை பூஜை செய்து, காமவிகாரத்தை வென்று விட்டார்கள். தினம் தினம் பூஜை செய்து அந்த வாய்ப்பை பெற்றார்கள்.

 

அசுத்த தேகம் அவர்களுக்கு நீங்கிவிட்டது. அதனால் சுத்ததேகி ஆனார்கள். சுத்ததேகி என்பவன் பற்றற்றவன். காமவிகாரம் இல்லாதவன். அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஞானிகள்தான் சுத்ததேகி. தாய்தந்தையால் எடுத்த காமதேகத்தை, ஆசான் அகத்தீசன் தயவோடு பொடிப்பொடியாக ஆக்கினார்கள். இவர்களாக நீக்கவில்லை. ஆசான் நீக்கினார்.

 

இதைத்தான் களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார் மகான் திருமூலர். இந்த உடம்பில் உள்ள களிம்பை அறுத்தான் என்று சொல்லுவார். இந்த உடம்பில் களிம்பாகிய கபம், கட்டிக் கொண்டிருக்கும். யோகிகள் ஆசான் ஆசியோடு அறுத்து விடுவார்கள்.

 

செபமது செய்யத் தேகமுஞ் சித்தியாம்

கபமது அறுத்துக் கருத்தையுள் ளிருத்தி

உபநிட தப்பொரு ளுண்டென நம்பி

தபமது செய்யத் தானவ னாமே.

மகான் சட்டைமுனிவர் அருளிய தண்டகம் – கவி எண் 35.

 

நாம் ஞானிகளை வணங்குகிறோம். நமது உடம்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நமது எதிரி நமது உடம்புதான். கபம் நமக்கு எதிரிதான். ஞானிகள் ஆசியில்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

 

அசுத்த தேகத்திலிருந்து எழுகின்ற உணர்வு அசுத்தமாகவே இருக்கும். காவி கட்டுதலும், தாடி வளர்த்தலும், நெற்றியில் பட்டை போடுதலும், யோகத்தண்டு வைத்திருப்பதும், மான் தோல் வைத்திருப்பதும் ஒரு கலை என்று எண்ணி, சிலபேர் ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

 

அவனைப்பற்றி ஞானிகளுக்கு தெரியும். இவன் இன்னும் தேகத்தை வெல்லவில்லை. இவன் பலபேரை கெடுத்துவிடுவான். இவன் பேசுவது எல்லாமே பொய் என்பார். அவன் சிந்தனை முழுதும் கீழ்த்தரமாகவே இருக்கும், சாப்பாட்டில் குறையில்லாமல் நன்றாக சாப்பிடுவான், உடம்பையும் குறைக்க மாட்டான், உணர்வையும் குறைக்க மாட்டான், சுத்த காமுகனாக இருப்பான். அவன் இந்த துறையை மாசுபடுத்துவான்.

 

ஞானிகள் காட்டுகிற பாதை சுத்தமாக இருக்கும்.இன்னும் எங்களுக்கு விகாரம் அடங்கவில்லை ஐயாஎன்று ஆசானிடம் கேட்டால், அதற்காகத்தான் நாம் ஆசானை உனக்கு சுட்டிக் காண்பிக்கிறோம் என்பார். ஆசான் திருவள்ளுவர் சொல்கிறார்,

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47.

 

அறத்தின் இயல்பையும், உடம்பைப் பற்றியும் அறிந்து கொண்டான். எழுகின்ற காமத்தை மனைவி மூலம் தீர்த்துக் கொள்கிறான். அதற்காக உடம்பை அதிகம் செலவு செய்யமாட்டான். கணக்காக உடம்பை செலவு செய்வான். அவர்கள் பெரிய வல்லவர்கள். அவர்கள் எல்லோரும் ஞானிகள்.

 

இல்லறத்திலேயே மனைவி மக்களோடு இருப்பான். சுத்ததேகிகளான ஆசான் ஞானபண்டிதன், மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் அருணகிரிநாதர் போன்ற ஞானிகளை தினம்தினம் பூஜை செய்வான்.

 

நம்மை வஞ்சிக்கக் கூடிய தேகத்தை, விகாரத்தை மனைவி மூலம் தீர்த்துக் கொள்வோம்என்று ஆறுதல் அடைவான். தினமும் ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் தியானம் செய்வான்.

 

போலி ஆன்மீகவாதி திருமணம் செய்ய மாட்டான், காவி அணிந்து கொள்வான், புலித்தோல், மான்தோல் போட்டு அமர்ந்திருப்பான். அவனுக்கு தலைவனையும் தெரியாது, தலைவனை வணங்கும் முறையையும் தெரியாது. அவன் மனதுக்கு பட்டதெல்லாம் பேசிக் கொண்டு, செய்து கொண்டிருப்பான். அவனிடம் ஒரு நல்ல இல்லறத்தான் மாட்டிக் கொண்டால், அவனுடைய சொத்துக்களை எல்லாம் வஞ்சனையால் கவர்ந்து கொள்வான்.

 

இத்தகைய வேடதாரி, அசுத்ததேகி, அசுத்தமானவன், அசிங்கமானவன், களிம்பு உள்ளவன், ஈனம் உள்ளவனாக இருக்கிறான். ஆனால் ஞானம் உள்ளவன்போல் நடிப்பான்.

 

ஆனால் ஞானிகளை வணங்குகிறவனைஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்என்பார். இல்லறத்திலே இருந்து கொண்டு எழுகின்ற காமத்தை மனைவி மூலம் தீர்த்துக் கொள்வான். அவனது விகாரம் அடங்கும். அதனால் மனசாந்தம் உண்டாகும். ஆசானை பத்து நிமிடம் நாமஜெபம் செய்வான். காமத்தை வென்றவனையும், பற்று அறுத்தவனையும் வணங்குவான்.

 

பற்றற்றவன் என்றால், உடம்பில் விகாரம் அற்றவன் என்று அர்த்தம். இது மிகவும் மர்மமான வார்த்தை .

இவன் இல்லறத்திலேயே இருந்துகொண்டு வியாபாரம் செய்வான், பொருள் சேகரிப்பான். வெளியே தெரியாமல் அடக்கமாக இருப்பான். உண்மைப் பொருள் தெரிந்த ஞானிகளிடம் உபதேசம் பெற்றிருப்பான்.

 

அவர்கள்உனக்கு இன்னும் விகாரம் அடங்கவில்லை. கடவுள் பொல்லாத காமதேகத்தை படைத்திருக்கிறான். அதனால் ஒன்றும் குற்றமில்லை. நீ துள்ளி குதிக்க முடியாது. திருமணம் செய்து கொள். இல்லையென்று சொன்னால் தடுமாறி விடுவாய். அந்த தடுமாற்றமே உன்னை நரகத்தில் தள்ளிவிடும். தவறு செய்து இந்த துறையை மாசுபடுத்திவிடாதே!என்பார்கள்.

 

அந்த உபதேசத்தை கேட்ட இவன் திருமணம் செய்து கொள்வான். உடம்பினுடைய போக்கிலே போவான். அசுத்த தேகத்தில் கொழுப்பு என்று சொல்லப்பட்ட சத்து அதிகமானால் சிந்தனை தடுமாறும். அவன் காவிகட்டி என்ன பயன்? ஒன்றும் பயனில்லை. நெற்றியில் விபூதி வைத்தும், தாடி வளர்த்தும், மான் தோலில் அமர்ந்தும், யோகத்தண்டு வைத்தும், அவனுக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை. அவனுக்கு அவனுடைய விகாரம் அடங்காது.

 

ஆனால் நாம் சுட்டிக்காட்டக்கூடிய இல்லறத்தான், மிகப்பெரிய உண்மையை தெரிந்தவன். அதனுடைய போக்கிலே போவான். பதினைந்து வருடம் இருபது வருடம் அதைப்பற்றி கவலைப்பட மாட்டான். அவன் சுத்ததேகிகளான ஞானிகள் உபதேசம் பெற்றிருக்கிறான். அவர்கள்இப்படியே செல்என்பார்கள். அத்தகைய இல்லறத்தான் இல்லறத்தில் இருப்பான். ஆனால் பந்தபாசமற்றிருப்பான். உலகத்தையும் புரிந்து கொள்வான், உடம்பையும் புரிந்து கொள்வான், தலைவனையும் புரிந்து கொள்வான். தலைவனை பூஜை செய்கிற முறையினையும் தெரிந்து கொள்வான், மேரு பூஜையும் செய்கிறான். இவனுக்கு மனைவி இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறது.

 

போலி ஆன்மீகவாதி செய்யும் பூஜை எப்படி மேரு பூஜையாகும்? காவி கட்டிக்கொண்டு, போராடிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் இந்த இல்லறத்தானோமாமேரு இமயமலை போன்ற உயர்ந்த பூஜை செய்கிறான்இவன் புரிந்து கொண்ட ஞானி. இல்லறத்தில் இருந்து கொண்டு அதன் போக்கிலே செல்கிறான். பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், துணையில்லாமல் கடவுளை அடைய முடியாது. ஆனால், ஆசான் ஆசி இருந்தால், அதை உடைத்து எறியலாம். மற்றவர்களால் முடியவே முடியாது.

 

யோகிகளால் மட்டும்தான் முடியும். கபத்தை ஆசான் ஆசியால் அறுத்தோம். ஆசான் ஆசியால் கபம் அற்றுப்போனது. இதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதை அசுத்த தேகம் நீங்கியவர்கள் சொல்வார்கள். தாய் தந்தையால் எடுத்த காமதேகத்தை வென்று விட்டார்கள் யோகிகள். ஆகவே நீ இல்லறத்திலிருந்து குடும்பத்தை நடத்திக்கொண்டு வா என்று சொல்லுவோம்.

 

இது நாங்கள் காட்டுகின்ற பாதை, தெளிவாக இருக்கும், குழப்பம் இருக்காது. இதை நாங்கள் சொன்னால்தான் உலக மக்களுக்கு தெரியும்.இந்த அற்பத்தனமான இன்பத்தை விரும்பி நீ அடையப்போவது ஒன்றுமில்லைஎன்று தலைவன் சொல்லுவார். உன்னால் முடியவில்லை என்றால் தலைவனிடம் உதவி கேள்.

 

எங்கள் தேகமெல்லாம் தலைவன் கொடுத்த தேகம், விகாரம் இல்லாத தேகம். கொடுமையான, பொல்லாத காமதேகத்தை விடுத்து ஓரளவுக்கு சலனங்கள் மட்டும் வைத்து பிறகு அவற்றையெல்லாம் உடைத்துவிட்டான்.

 

இங்கே வந்து பத்து நிமிடம் கூட, என்னால் உட்கார முடியவில்லை. மூலக்கனல் எழுந்து அனல் பறக்கிறது. உடம்பிலிருந்து ஆவி பறக்கிறது. முதுகுப்புறத்தில் காந்துகிறது. இந்த காற்றாடி இல்லையென்றால் என்னால் தாங்க முடியாது, கண்ணெல்லாம் பொங்கிவிடும்.

 

இவ்வளவு அனல் கொடுத்து அதை செய்ய வேண்டும். மூலக்கனல் எழும்ப வேண்டும். மூலக்கனல் எழும்பாமல் ஒருவன் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவனுக்கு மூலக்கனல் எழும்புகிறது என்றால், அவனுக்கு தலைவன் ஆசி இருக்கிறது என்று பொருள். தலைவனே வாசியோடு வாசியாக கலப்பார், மூச்சுக்காற்றோடு மூச்சுக்காற்றாக உள்ளே நுழைவார், காமதேகத்தை பொடியாக்கி விடுவார், கபத்தை அறுப்பார், மூலக்கனலை ஏற்றுவார்.

 

இந்த வாய்ப்பை அவன் பெறுவதற்கு தினம் தினம் உருகி மேரு பூஜை செய்திருக்கிறான். ஆசான் அகத்தீசரிடம்தாயினும் இனிய தயவுடைய தெய்வமே! நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்என்று இல்லறத்திலிருந்து கேட்கிறான். அவன் இல்லறஞானி. தினம்தினம் கேட்டுக்கொண்டே இருப்பான். நேரம் வந்தது, பக்குவம் வந்தது. தினம் ஆசானை பூஜை செய்திருக்கிறான். இதுதான் மாமேரு பூஜை என்பது. இமயமலை போன்ற பிரம்மாண்டமான பூஜை.

 

அவன் தலைவனை பூஜிக்க நேராக அழைக்கின்றான். தலைவனைப்பற்றி அறிந்து, தலைவனை அழைக்கக்கூடிய பக்குவம் வருவதற்கு பதினைந்து, இருபது வருடங்கள் ஆகலாம். அந்த பக்குவம் வந்தவுடன் இல்லறத்தான் என்ன செய்வான்? மனைவியைக் கூப்பிடுவான்.தாயே இதுநாள் வரையிலும் என் தவத்திற்கு உதவி செய்திருக்கிறாய். உன் திருவடியை வணங்குகிறேன்என்பான். மனைவியும் நம்முடைய கணவனுக்கு பக்குவம் வந்துவிட்டது. அவன் உயர்ந்தால் நாமும் உயர்வோம் என்று எண்ணி அன்று முதல் அவனுக்கு சகோதரியாகவோ, தாயாகவோ மாறிவிடுவாள்.

 

இந்த வாய்ப்பு அந்த இல்லறத்தானுக்கு பதினைந்து வருட பூஜை செய்ததால் கிடைத்தது. அவன் அடக்கத்தோடு வெளியே தெரியாமல் இமயமலை அளவுக்கு உயர்ந்த மாமேரு பூஜை செய்திருக்கிறான், பிரம்மாண்டமாகவும் செய்திருக்கிறான். மாமேரு பூஜை என்பதே ஆசான் அகத்தீசர் திருவடியைப் பற்றி பூஜிப்பதுதான்.

 

அவனிடம், “நீ நல்லபடி வாழ வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்என மனைவி கூறுவாள். அதற்கு கணவன்என் தவத்திற்கு நீ உதவி செய்து இருக்கிறாய். இன்று முதல் நீயே என் தாய், நீயே கடவுள், வாலைத்தேவி என்று சொல்லப்பட்ட ஆதிசக்திஎன கூறுவான். ஆசான் ஆசி பெற்றதால் அவளுக்கும் புரியும்.

 

அவளும் ஆசானை தினம் தினம் பூஜை செய்கிறாள். ஆசானிடம்என் கணவன் பெற்ற இந்த வாய்ப்பை நானும் பெற வேண்டும்என்று உருகி பூஜை செய்கிறாள். அவளும் தியானம் செய்கிறாள். இவனும் தியானம் செய்கிறான். பார்த்தால் உலக நடையிலேயே இருப்பார்கள். பொது தொண்டு செய்வான், வியாபாரம் செய்வான், மனைவி மக்களோடு இருப்பான். ஆனால் அவனும் அந்த பெண்ணும் ஞானியாவார்கள். பதினைந்து ஆண்டுகள் ஆசான் அகத்தீசனை மனமுருகி பூஜை செய்து ஈடு இணையில்லாத பெருமைக்குரிய இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

 

ஆனால் சிலர் உண்மை ஆன்மீகத்தைப் பற்றி தெரியாமல் ஏதோ ஒரு நூலை படிப்பான், காவி அணிந்து கொள்வான், தன்னையே ஞானியென எண்ணிக் கொள்வான். தேகம் முரட்டு தேகமாக இருக்கும். தேகம் காமதேகமாக இருக்கும், பட்டினி கிடப்பான். ஏதோ ஒன்றை நினைத்து அலைந்து கொண்டே இருப்பான். அவன் ஞானிகள் ஆசி பெறாதவன்.

 

ஆனால் ஞானிகளின் ஆசிபெற்ற இவனோ முன்னேறிக் கொண்டே இருப்பான். ஆன்மீகவாதிகளே ஆன்மீகத்தை புரிந்து கொள்ளுங்கள். உண்மைப் பொருளை தெரிந்துகொள்ள இதுதான் உபாயம்.

 

ஆணும் பெண்ணுமாக சேர்ந்து பிள்ளைகளை காப்பாற்றுகிறார்கள், விருந்தை உபசரிக்கிறார்கள். தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறார்கள். கணவனோ தலைவனை அந்தரங்கமாக பூஜை செய்கிறான். அவன் பூஜையில் தலைவனை நோக்கிஅடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என் மனைவிக்கும் ஞானம் சித்திக்க வேண்டும், எனது மனைவியும் முன்னேற வேண்டும். எனக்கு துணையாக இருக்கிறாள். என்னுடைய தவத்திற்கு துணையாக இருக்கிறாள். என்னை புறக்கணிக்கவில்லை. இப்பேர்ப்பட்ட மனைவியை நான் பெற்றிருக்கிறேன். அவளும் வாழ வேண்டும். நானும் வாழ வேண்டும்என்று பூஜையில் வேண்டுவான். அத்தகைய இல்லறத்தானை ஞானி என்று இனம் கண்டுபிடிக்க முடியாது.

 

ஆனால் சிலர் உண்மைப் பொருள் தெரியாமல் காவி கட்டியிருப்பான். அவனுக்கு தவத்தைப்பற்றி தெரியாது, பொருள் வெறியனாக இருப்பான், காமவெறியனாக இருப்பான். இது அசுத்த ஆன்மீகம்.

 

மகான் திருவள்ளுவர் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பார். இது மிகப்பெரிய வார்த்தை . இயல்பினான் என்பது உடம்பின் இயல்பு, அறத்தின் இயல்பு, மனைவியின் இயல்பு, ஆணின் இயல்பு, பெண்ணின் இயல்பு, மோட்சத்திற்குரிய உடம்பின் இயல்பு என்பதை எல்லாம் அறிவதையே இயல்பினான் என்றார்.

 

இந்த உடம்பையும் காப்பாற்றிக் கொண்டான், விகாரத்தையும் தீர்த்தான், மனம் சாந்தமுற்றான். ஆண்டுகள் பல ஆகும் என்பதை அறிந்து கொண்டான், தலைவனை புரிந்து கொண்டான், வெற்றிமேல் வெற்றி! மிகப்பெரிய வெற்றி பெற்றான்.

 

தலைவனை புரிந்து கொண்டு பூஜை செய்தான். இவ்வாறு தலைவனை புரிந்து கொண்ட மக்கள் எல்லாம் சுத்த தேகிகள். தலைவனை புரிந்து கொள்ளாமல் பூஜை செய்பவர்கள் எல்லாம் அசுத்த தேகிகள். இது அசுத்த ஆன்மீகம். ஆக சுத்த ஆன்மீகம், அசுத்த ஆன்மீகம் என்பதற்கு இதுதான் விளக்கம்.

 

மகான் திருவள்ளுவர் மலரினும் மெல்லியது காமம் என்பார். சுத்த இல்லறத்தான் ஆசானைக் கேட்பான்.இன்று என் விகாரத்தை தீர்த்துக் கொள்ளட்டுமா?” என்பான். தினம் தினம் பூஜை செய்வதால் ஆசானே சுட்டிக்காட்டுவான். ஆமாம் விகாரம் மிகுதியாகி விட்டது, தணித்துக் கொள் என்று ஆசான் கூறுவார். அவனுடனே ஞானிகள் இருப்பார்கள். இந்த வாய்ப்பைப் பெற வேண்டும். ஆசான் ஆசி இருந்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஆசானின் ஆசிபெற்ற மக்கள் ஆசானைக் கேட்டுத்தான் செய்வார்கள்.

 

மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.

திருக்குறள் – புணர்ச்சி விதும்பல் – குறள் எண் 1289.

யோகிகளுக்குத்தான் அது தெரியும். அதனுடைய இயல்பை புரிந்து கொள்வார்கள்.

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47.

 

அறத்தின் இயல்பையும், இயற்கையின் இயல்பையும், உயிரின் இயல்பையும், உடலின் இயல்பையும், பண்பின் இயல்பையும், ஆணின் இயல்பையும், பெண்ணின் இயல்பையும், பொறிபுலன் இயல்பையும் அறிந்து அதன் இயல்போடு சென்று வீடுபேறு அடைய முயல்கின்றவன், மற்றைய வேறு வழிகளில் மோட்சலாபம் அடைய முயலுகிறவனை விட, கடவுளை அடைய முயலுகின்றவனை விட, முக்திநெறியை அடைய முயலுகின்றவனைவிட எல்லோருக்கும் மேலானவன். அவன் மேற்சொன்னபடி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் முயற்சிகளை செய்கின்ற எல்லோருக்கும் தலைவனாவான்.

ஜென்மத்தைக் கடைத்தேற்ற முயல்வார்க்கு இவன் தான் தலைவன். இப்பேர்ப்பட்ட இரகசியம் இந்தத் துறையில் உள்ளது.

 

நாம் இவ்வளவு எளிமையாக பேசுவது, உண்மையை அன்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கபத்தை அறுக்க வேண்டும். கபம் அற்றுப் போய்விட்டது. நாங்கள் தினம் தினம் கபத்தை அற்றுப்போகச் செய்வதை வேலையாக செய்கிறோம். அன்பர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பேசுகிறோம்.

 

காமதேகத்தை கொண்டவன் மக்களுக்கு தெளிவான பாதையை காட்ட மாட்டான். அசுத்த தேகம் உள்ளவன் பொருள் வெறியனாக இருப்பான். அசுத்ததேகம் உள்ளவன் காமவெறியனாக இருப்பான். அசுத்ததேகம் உள்ளவனிடம் பக்திநெறி இருக்காது. ஆகவே, சுத்த தேகம் அடைவதற்கு பாடுபட வேண்டும்.

 

தினம் தினம் கண்ணீரோடு உருகி தியானம் செய்வான். அவன் நெற்றியில் விபூதி இருக்காது, காவி அணிய மாட்டான், அவன் முன்னேறுவான். இவன் இல்லற ஞானி. இதைத்தான் மகான் திருவள்ளுவர் சொல்வார்,

 

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா; இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48.

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 47.

 

தவத்தை மேற்கொண்டு கடவுளை அடைய விரும்புகிறவனுக்கு இவர்தான் தலைவர். ஆற்றின் ஒழுக்கி உண்மைப்பொருளை தெரிந்து கொண்டான். இந்த ரகசியத்தை முதுபெரும் ஞானிகளிடம் ஆசி பெற்றதால் அறிந்தேன். உண்மைப் பொருள் அறிந்த, ஜாதிவெறியற்ற, காமவிகாரமற்ற என் மீது கருணை கொண்டு தயவுள்ள சொற்குரு சொல்லியதால் அறிந்தேன்.

 

அவர் சொல்லை நான் பின்பற்றுகிறேன். நம்பிக்கையோடு என்னை பூஜை செய்யச் சொன்னார்கள்.

ஆற்றின் ஒழுக்கி – நாம் அறிந்த உண்மையை, நன்னெறியை அன்பர்களுக்கும் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் பாவம்.

 

நாங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறோம். நாங்கள் நினைத்ததெல்லாம் கைகூடும். நாங்கள் தொட்டது தடைபடாது. நாங்கள் செய்வதெல்லாம் உலகமக்கள் நன்மைக்காகத்தான் இருக்கும். எங்கள் பேச்சும் செயலும் நாட்டு நலனை மையமாக கொண்டிருக்கும்.

 

எங்களிடம் சுயநலம் இருக்க முடியாது. இதைத்தான்ஆற்றின் ஒழுக்கிஎன்றார். நாங்கள் பல ஜென்மங்களில் ஆசானை உருகி பூஜை செய்தோம். பல ஜென்மங்களில் பூஜை செய்ததால் பொல்லாத காமதேகத்தை நீக்கி ஒரு நடுத்தரமான உடம்பை ஆசான் எங்களுக்கு தந்தார். நாங்கள் இருபது வருடமாக தினம்தினம் ஆசானை உருகி பூஜை செய்தோம். அதனால் அந்த மாசுள்ள தேகம் பொடியாகியது, கபத்தை அறுத்தோம்.

 

நாங்கள் செய்தது எல்லாம் அதோட போக்கிலேயே சென்றோம். இப்போது அன்பர்களுக்கு நன்னெறியை காட்டக்கூடிய தகுதி எங்களுக்கு வந்தது.

ஒரு நல்ல தொண்டன் கடவுளை அடைய விரும்பினால் அவனை கூப்பிட்டு, உனக்கு ரொம்ப விகாரமான தேகம் இருக்கிறது, திருமணம் செய்து கொள் என்போம். கடவுளை அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தவம் செய்வோர்க்கு தலைவன் அதற்காகவே ஒரு தேகத்தை அமைத்து இருப்பார். அத்தேகத்தை அமைக்கும்போதே முறையோடு அமைத்து இருப்பார்.

 

அவர் சொல்கிற கருத்துகள் நியாயமாக இருக்கும், அன்பர்களுக்கு நன்மை தரும். ஆகவே இதை நாங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஆண்களையும், பெண்களையும் அழைத்துநீ கடவுளை அடைய விரும்புகிறாயா?” என்றால், விரும்புகிறேன் என்று சொன்னால்நீ ஒரு நல்ல துணையை (மனைவியை அல்லது கணவனை) திருமணம் செய்து கொள். தேகம் கொடுமையானது என்று தெரியும்என்று சொல்வோம். ஆசானை வணங்குகிறான். விகார தேகம் நீங்குது. பொல்லாத காம தேகம்தான் வஞ்சனையாக உள்ளது. தலைவன் ஆசி இருந்தால் எல்லாவற்றிலுமிருந்து தப்பித்து விடலாம். தலைவன் ஆசி இருந்தால் சாதாரண உடல் இன்பத்தை வென்று விடலாம். தலைவன் ஆசியோடு அதற்குரிய ஆற்றலையும் அறிவையும் பெறலாம்.

 

நான் நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய விரும்புகிறேன். நான் சாதாரண உடல் இன்பத்துக்கு அடிமையாக மாட்டேன். அதற்குரிய வல்லமையை தலைவனிடம் கேட்கிறேன். அதை எனக்கு தருவார் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.” |

 

இப்படி ஒரு பெண் கேட்கும்போது, அது உன்னுடைய விருப்பம் என்று நான் சொல்லுவேன். ஆனால் இந்தத் துறை மாசுபட்டு விடக்கூடாது. நீ திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஆசான் ஆசியில் செய்து கொள்ளலாம். பெரியவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ள வேண்டாம்.

 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தினம்தினம் ஆசானை பூஜை செய்வேன் என்று முடிவெடுக்க வேண்டும்.நான் பந்த பாசங்கள், மற்றைய ஆசாபாசங்களுக்கும் அடிமையாக மாட்டேன்என்று உறுதி எடுக்க வேண்டும்.

 

பொருள் சேர்க்கும் எண்ணம் இல்லாமல் நடந்து கொள்வேன். என் இல்லறத்தை செம்மையாக நடத்துவேன். எனக்கு உணவும் உடையும் இருந்தால் போதும். உன் திருவடியைப் பற்றுகின்ற வாய்ப்பை மட்டும் கொடுத்தால் போதும்என்று உறுதி எடுக்க வேண்டும்.

 

இத்தகைய பேரறிவை, ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய பேரறிவை சாதாரணம் என்று நினைத்து விடாதே. அப்படி ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு. திருமணம் செய்து கொண்டும் வெற்றி பெறலாம். அதற்கு மகான்களின் ஆசி வேண்டும். இதையெல்லாம் நாம் சொல்வதின் நோக்கம் இந்தத் துறை மாசுபடக்கூடாது என்பதற்காகத்தான்.

 

ஆண்களும் பெண்களும் திருமணம் செய்ய தடை இல்லை. அதே சமயத்தில் தனிமையில் இருந்து தொண்டு செய்யவும் தடையில்லை. ஆசானை கண்ணீர் விட்டு உருகிநான் தனிமையாக தொண்டு செய்ய விரும்புகிறேன்என்று கேட்டால் அதற்கும் தடை இல்லை. திருமணம் செய்து கொண்டும் தொண்டு செய்யலாம், திருமணம் செய்யாமலும் தொண்டு செய்யலாம் என்று கூறி உள்ளேன். எல்லாவற்றிற்கும் தலைவன் ஆசி வேண்டும். புண்ணியபலம் இருந்தால் நிச்சயமாக தப்பிக்க முடியும்.

 

நாங்கள் முன் ஜென்மத்திலே தொண்டு செய்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார்கள். தலைவனின் திருவடிகளைப் பிடித்து கரையேறிக் கொள்ளலாம். துணையோடும் போகலாம், தனித்தும் போகலாம். ஆனால் இந்தத் துறையை மாசுபடுத்தக் கூடாது. எங்கள் பெயரை சொல்லிக் கொண்டு, ஜாதிவெறியைக் காட்டக் கூடாது, சிறுமை குணத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று தலைவன் சொல்லுவார்.

 

பெரியோர்கள் ஆசி இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றி பெறுகின்ற பிள்ளைகளது திருவடிகளை வணங்குகிறேன். வெற்றி பெறுகின்ற பிள்ளைகள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை எனது தாயாக நினைக்கிறேன். அவர்கள் மற்றவர்களையும் நன்னெறிப்படுத்த வேண்டும்.

 

நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். நமக்குள்ள பொருள் போதும். நல்ல வீடு, மனைவி, மக்கள், உத்தியோகம் உள்ளது. பிறகு ஏன் பேராசையோடு பொருளை தேடி அலைய வேண்டும்? இந்த பொருள்பற்று உன்னை கெடுத்துவிடும்.

 

ஆசான் திருவடியை பற்றிக்கொள். அது உன்னை காப்பாற்றும். இதையெல்லாம் சொல்வதுதான்ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா என்பது ஆகும்.

மற்றவர்களை நன்னெறிப்படுத்தி, இவனும் நன்னெறியோடு இருந்து வந்தால்நோற்பாரின் நோன்மை உடைத்து என்றார். தவம் செய்பவனை விட இவன் வலிமை உள்ளவன் ஆவான்.

 

மகான் திருவள்ளுவர் முந்தைய குறளில் தவத்தில் ஈடுபடுகின்ற மக்கள், துறவை மேற்கொள்கின்ற மக்களுக்கு தலைவன் என்றார். இந்தக் குறளில், இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை என்றார். இப்படிப்பட்ட இல்லறத்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற மக்களுக்கு தலைவன் என்பார். இந்த இல்லறத்தானை ஞானிகளுக்கு எல்லாம் தலைவன் என்றார்.

 

ஆனால் காவி உடுத்திக் கொண்டு, கையில் கமண்டலம் வைத்திருக்கிறான். இவன் நரகத்திற்கு தலைவன் என்றார்.

ஒரு இல்லறத்தானைப் பார்த்து ஞானிக்கு தலைவன் என்றார். இவனை மகான் திருவள்ளுவர் பெரிய மனிதர் என்கிறார்.

ஆனால் காவி உடை தரித்தவனைப் பார்த்து அயோக்கியர்களுக்கு, கயவர்களுக்கு, வஞ்சகர்களுக்கு தலைவன் என்றார்.

 

அந்த இல்லறத்தானை முயல்வாருள் எல்லாம் தலை என்றார். தவத்தை முடிக்க, தவத்தை மேற்கொள்ள முயற்சிக்கின்ற, ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற மக்களுக்கு இந்த இல்லறத்தானே தலைவன் என்றார்.

 

ஆனால் அவன் (போலி ஆன்மீகவாதி) நரகத்திற்குத் தலைவனாக இருக்கிறான். நல்ல இல்லறத்தானிடம், அவனுடைய தோற்றத்தைக் கண்டு மயங்கக்கூடாது என்று நாம் சொல்ல வேண்டும். அவன் (போலி ஆன்மீகவாதி) இருட்டிலே கிடக்கிறான். அவன் எப்படி உனக்கு ஞானத்தை தருவான் என்று சொல்ல வேண்டும்.

 

எங்களை நீங்கள் நம்ப வேண்டும். அயோக்கியர்களை இனம் கண்டு பிடிக்கும் வல்லமை நம்முடைய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கும், நமது சங்க அன்பர்களுக்கும் உண்டு. இது ஆசான் அகத்தீசர் ஆசியை பெற்றதால் கிடைத்த பேறு.

 

போலி ஆன்மீகவாதி பார்த்தால் பரப்பிரம்ம சொரூபி மாதிரி இருப்பான். உண்மைப் பொருளை அறிய மாட்டான், அவனை நம்பக்கூடாது. அதனால்தான் மகான் திருவள்ளுவர் சொல்வார்,

 

கணைகொடிது; யாழ்கோடு செவ்விது;ஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

திருக்குறள் – கூடா ஒழுக்கம் – குறள் எண் 279.

 

அம்பு அழகாக இருக்கும். உண்மைப் பொருள் தெரியாத அசுத்த ஆன்மீகவாதி அம்புபோல் அழகாக இருப்பான். ஒரு மணி நேரம் பூஜை செய்வான். பத்மாசனத்தில் இருப்பான். பெண்களைவிட அதிகமாக தன்னை அலங்கரித்துக் கொள்வான். அதனால்தான் மகான் திருவள்ளுவர் அவனைப் பார்த்து நம்பாதே என்றார். அவன் செய்யும் செயலைப் பார்த்து அவனைப்பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றார்.

 

அவனுடைய சிந்தனை முழுதும் கொடுஞ்செயலாக இருக்கும். ஆனால் நாம் அப்படி அல்ல, உண்மைப் பொருள் தெரிந்தவர்கள்.ஆசான் அகத்தீசன்தான் உலகத்திற்கு தலைவன், ஞானத்திற்கும் தலைவன்என்று சொல்லி உலக மக்களிடம் இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.

 

யார் பரப்பிரம்ம சொரூபியாகவும், ஞானபண்டிதனாகவும், ஆசான் அகத்தீசனாகவும், ஆசான் இராமலிங்க சுவாமிகளாகவும் உள்ளார்களோ, அவர்களே மிகப்பெரிய மகான் என்று நாம் மக்களிடம் சொல்ல வேண்டும்.

 

அப்படி சொல்லும்போது நல்ல இல்லறத்தானும் ஆன்மீகவாதிகளும் நம்மிடம் வந்து உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் சென்று பொருளாதாரத்தை இழந்து ஏமாற மாட்டார்கள்.

 

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48.

 

இன்னும் சிலபேர் உண்மை ஆன்மீகத்தை அறிய இங்கே வாருங்கள் என்று விளம்பரப்படுத்துவான், போர்டு வைத்திருப்பான், காவியும் அணிந்திருப்பான். ஏனெனில் அப்போதுதான் நல்ல இல்லறத்தான் அவனை நம்பி வருவான் என்பதனால் விளம்பரப்படுத்துவான்.

 

ஆனால் உண்மையில் அப்படி இருக்க மாட்டான். நாம் உண்மைப் பொருளை அறிந்திருக்கிறோம். நாங்களும் காவி, யோகத்தண்டை காட்டி மக்களை ஏமாற்ற வரவில்லை. இதைக் காட்டினால்தான் உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள மக்கள் வருவார்கள்.

 

இந்த வேடம் நாட்டு மக்களின் நலனை மையமாக வைத்து அணிந்திருக்கிறோம். மற்றவரையும் நன்னெறிப்படுத்தி, தானும் நன்னெறியில் நிற்க வேண்டும்.கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்னஎன்றார்.

 

அசுத்த ஆன்மீகவாதிகள் எல்லாம் அம்பு போன்ற கொலைக்கருவி என்றும், யாழ் பார்ப்பதற்கு அழகாக இருக்காது, ஆனால் அதிலிருந்து இனிய இசை கிடைக்கும். ஆகவே தோற்றத்தை பார்த்து முடிவெடுக்காமல், செயல்பாட்டை பார்த்து ஒருவனை உண்மை ஆன்மீகவாதியா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

மகான் திருவள்ளுவர், ஒருவனின் வினையைப் பார், பின்பு அவனுடைய செயலைப் பார். அவனுடைய செயலைப் பார்த்து நம்பு இல்லையென்றால் அவனை நம்பி எல்லாப் பொருளையும் இழக்க வேண்டியிருக்கும் என்கிறார் மகான் திருவள்ளுவர். இங்கே இதையெல்லாம் சொல்ல ஆசானிடம் இருந்து கட்டளை வந்திருக்கிறது. ஆசான் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

 

நோற்பாரின் நோன்மை உடைத்து என்பதில் நோற்பார் என்பது தவம் செய்பவரைவிட வலிமையானவன் என்று பொருள். நமது சங்கத்தை நம்பி சில ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். நாம் மேற்கொள்கின்ற எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கிறது, வெற்றிமேல் வெற்றி பெறுகிறோம்.

 

முன்பு ஐநூற்றி முப்பத்தியொரு ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்திருக்கிறோம். இப்பொழுது ஆயிரத்தெட்டு இலவச திருமணம் செய்ய உள்ளோம். மேலும் அன்னதானம் தொடர்ந்து செய்கிறோம். ஆகவே காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடக்கிறது. தலைவனை நம்பி தினம் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறோம். இதையெல்லாம் தலைவன் ஆசியோடு செய்கிறோம். இந்த அற்புத செயல் நடப்பதற்குக் காரணம், ஆசான் அகத்தீசர் பூஜைதான்.

 

செயல்பாடு நன்றாக இருக்க வேண்டும். அந்த செயல்பாடு, நன்மையாக இருப்பதற்கு தலைவன் ஆசி இருக்க வேண்டும். நமது சங்கத்தார் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் நன்மையைத்தான் கொடுக்கும், தீமைக்கு வேலையில்லை. எப்போதும் நல்லதே செய்வோம்.

 

தலைவனுடைய ஆசியைப் பெற்றதால், நம்மிடம் பலகீனம் இல்லை. நம்மை வஞ்சிக்கக்கூடிய தேகம் நம்மை விட்டு நீங்கிவிட்டது. நம்முடைய செயலை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும்.

 

நமது சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஞானிகள். அவர்கள் இல்லற ஞானிகள். இவ்வாறு ஆவதற்கு என்ன காரணம்? தலைவனை (அகத்தீசனை) புரிந்து கொண்டார்கள். விகாரதேகத்தை அதனுடைய போக்கிலேயே சென்று நீக்கினார்கள், வெற்றி பெற்றார்கள்.

 

அன்பர்களுக்கு ஆசான் அகத்தீசனை பூஜை செய்கிற முறையை சொல்லித் தந்திருக்கிறோம்.நான் தடுமாறுகிறேன் ஐயா! நீர்தான் என்னை காப்பாற்ற வேண்டும்என்று தலைவனிடம் உருகி கேட்கச்சொல்லி இருக்கிறேன். தினம் தினம் உருகி பூஜை செய்கிறார்கள்.

 

ஒருபக்கம் அறப்பணிக்கு தொண்டு செய்கிறார்கள். மறுபக்கம் வாகனத்தில் போகும்போது அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். வெறும் பேச்சு பேசமாட்டார்கள்.

 

அகத்தீசா, அகத்தீசா, அகத்தீசா என்று இவர்கள் சொல்லிக்கொண்டு செல்வதை ஆசானும் பார்க்கிறார், தியானம் செய்கிறார்கள், களைப்படையும்வரை தொண்டு செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட தொண்டர்களை ஆசான் கைவிடுவாரோ? அவர் என்ன கருணை இல்லாதவரா? நிச்சயம் கருணை உள்ளவர், தொண்டை மதிக்கக் கூடியவர்.

 

காலையிலிருந்து பெண்கள் தொண்டு செய்வதை தலைவன் பார்க்கிறார். என் மகள் நல்லபிள்ளை, நல்லபிள்ளை என்று சொல்வார். அவர்களுடைய செயலைப் பார்த்து நல்லபிள்ளை என்பார்.

 

ஆசான் அகத்தீசனும் ஞானபண்டிதனும் நல்லபிள்ளை என்று சொன்னால் அதற்கு ஈடு இணை உண்டோ ? எவ்வளவு உயர்ந்த பண்பு நம்மிடம் இருந்தால் அவர்கள் நம்மை நல்லபிள்ளை என்று சொல்வார்கள்?

 

நாம் காமவிகாரத்தில் தடுமாறிக் கொண்டிருப்பது அவர்களுக்கு (ஞானிகளுக்கு) தெரியும்.நான் விகாரம் இல்லாதவன். என் திருவடியைப் பற்று. உன்னிடம் உள்ள காமவிகாரத்தை நீக்குவதற்கு நான் உதவி செய்வேன். என் திருவடியைப் பற்று. உன் காமவிகாரத்தை உடைத்துத் தருகிறேன்என்பார்.

 

ஐயா! நாங்கள் எல்லாம் காமதேகம் உள்ளவர்கள். எவ்வளவோ பூஜை செய்தும் இன்னும் தடுமாற்றம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் பெரியவங்க ஐயா. எங்கள் மீது கொஞ்சம் கருணைகாட்டி, ஒரு கடைக்கண் பார்வை எங்களை பாருங்கள் ஐயா! நீங்கள் பார்த்தால் நாங்களெல்லாம் தப்பித்துக் கொள்வோம்.

 

இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தால் அவர்கள் (ஞானிகள்) எல்லாம் அளவில்லாத மகிழ்ச்சி அடைவார்கள். பெரியவர்கள்அஞ்சேல் மகனே! உன்னை ஆதரிக்கிறேன்என்பார்கள். இதை கேட்கிற முறையோடு கேட்டு, பெற வேண்டியதை பெற வேண்டும். இவ்வாறு கேட்பதற்கு நாம்தான் சொல்லித்தர வேண்டும். நாங்கள் அப்படி கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். நீங்களும் நாங்கள் கேட்டதுபோல், கேட்டு வெற்றிபெற வேண்டும்.

 

மகான் திருவள்ளுவர் சொன்னதுபோல நோற்பாரின் நோன்மை உடைத்து என்று அவர் சொல்வதற்கு காரணம் சில பேர்கள் ஆன்மீகம் என்ற பெயரில் உண்மைப் பொருளை அறியாமல், மனைவி மக்களை விட்டுவிட்டு, ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

 

இன்னும் சிலபேர் திருமணம் ஆனவனிடம் சென்றுவிந்துவிட்டால் நொந்து விடுவாய். விந்து விடாதேஎன்பான். நாங்கள் அவனிடம் இப்படி சொன்னது யார்? எந்த நூலில் இருக்கு? என்று கேட்போம்.

 

ஞானசித்தர்காலம் ஆனதால் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இந்த உலகத்தில் எந்த மூலையில் அராஜகவாதிகள், ஆன்மீகம் என்ற பேரில் உண்மை ஆன்மீகத்தை மாசுபடுத்தினால், அதை இங்கிருந்து கொண்டே சரிப்படுத்தி விடுவோம். |

 

விந்து விட்டால் நொந்து கெடுவான்என்று சொல்லி, நல்ல இல்லறத்தானை கெடுத்து விடுவான். அவன் மனைவி மக்களை விட்டுவிட்டு போய்விடுவான். இவ்வாறு சொல்கிறவன் கயவன், அயோக்கியன். ஆன்மீகம் என்ற பெயரில் நாட்டு மக்களை சூதாடுகின்றவன். மக்களிடம் மூடத்தனத்தை உருவாக்குகின்றான்.

 

நமது சங்கத்தை தலைமை தாங்குகின்ற ஞானிகள், அதை பொடிப்பொடி ஆக்குவதற்கு உரிய வல்லமையும் காலமும் வந்து கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமில்லை, உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் சரி. அத்தகைய அராஜகவாதிகளை இங்கிருந்தே பார்த்து ஞானிகள் புரிந்து கொள்வார்கள்.நீ தவறான பாதையை காட்டுகிறாய்என்பார்கள் ஞானிகள். மேலும்இன்று முதல் ஆசான் அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றுக்கொள். ஆசான் அகத்தீசனைப் பற்றி மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்து. பத்து, இருபது ஆண்களையும் கூப்பிடு. ஆசான் அகத்தீசனை பூஜித்து ஆசிபெற தூண்டு. வேறு தவறான பாதை எல்லாம் காட்டாதேஎன்று அவனுக்கு நாங்கள் அறிந்த உண்மையை சொல்வோம்.

 

குண்டலினி சக்தியை ஏற்றுகிறோம், இறக்குகிறோம்என்றும், “விந்துவிட்டால் நொந்து கெடுவான்போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதேஎன்பார்கள் ஞானிகள். தலைவன் ஆசி இருந்தால்தான் அந்த ரகசியத்தை உணரமுடியும்.

 

நாம் தலைவனோட கட்டளைப்படி பேசிக் கொண்டிருக்கிறோம். பக்தி மார்க்கத்தில் ஒருவன் இருப்பான். ஏதோ தடுமாறிக் கொண்டிருப்பான். ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்வான். ஆனால் சுப்பிரமணியர்தான் உலகத்திற்கே முதுபெரும் ஞானத்தலைவர் என்பது அவனுக்கு தெரியாது.

 

அவன் இதை அறியாமல் ஊர்ஊராக பட்டினி கிடந்து சுற்றுவான். பக்தி என்ற பெயரில் மூடத்தனத்தை வளர்த்துக் கொண்டிருப்பான். இதை நமது சங்கம் ஏற்றுக் கொள்ளாது.

 

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா; இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் 48.

 

தானும் நன்னெறியில் வாழ்ந்து மற்றவரையும் நன்னெறிப்படுத்தி வாழும் தவசியைவிட இல்லறத்தான் உயர்ந்தவன் என்று மகான் திருவள்ளுவர் சொல்வார்.

அன்பர்களுக்கு இன்று உபதேசம் செய்கிறோம். உலக மக்களுக்கு உதவியும் செய்வோம். எங்கள் சங்கத்திற்கு அந்த தகுதி வந்துவிட்டதால் சொல்கிறோம். தகுதி இல்லாவிட்டால் பேசுவோமோ? தலைவன் கட்டளை உள்ளது. ஓங்காரக்குடிலுக்கு வரும்போது தர்ம சிந்தனையோடு, பக்தி விசுவாசத்தோடு வந்து போகலாம். ஞானிகள் ஓங்காரக்குடிலில் எங்கும் சூழ்ந்து உள்ளார்கள். ஞானிகள் எல்லாம் ஓங்காரக்குடிலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த தத்துவம் பரவ வேண்டும். இந்த சங்கம் ஆசான் ஞானபண்டிதனையும், ஆசான் அகத்தீசனையும், ஆசான் புஜண்டமகரிஷியையும் தலைமையாகக் கொண்டு செயல்படும் சங்கம். இந்த உபதேசம் உலகெங்கும் பரவ வேண்டும். ஆங்காங்கே நடக்கக்கூடிய அராஜகங்கள் மறைய வேண்டும். மூடபக்தியை பரப்புகிற மக்கள், உண்மையை உணர்ந்து தெளிவடைய வேண்டும். தினம்தினம் ஆன்மீகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று ஆசான் பேச சொல்லி இருக்கிறார். அதனால் பேசி இருக்கிறேன். இதை பதிவு நாடாவில் பதிவு செய்துள்ளார்கள். அதை கேட்கும் மக்கள் தெளிவடைவார்கள்.

 

மலேசியாவில் ஆண்களும், பெண்களுமாக சேர்ந்து காலையில் பத்து நிமிடம் நாமஜெபம் செய்துவிட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று வசூல் செய்கிறார்கள். அதை இங்கு அனுப்புகிறார்கள். இங்கே உள்ள அன்பர்களும் தங்கள் சக்திக்குட்பட்ட தொகையை அன்னதானத்திற்கு கொடுக்கிறார்கள். இங்குள்ளவர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தாலும் அவர்கள் திருவடியை என் சிரம்மீது தாங்குவேன். காரணம் இது ஏழை நாடு.

அவர்கள் பொருளும் கொடுக்கிறார்கள், தொண்டும் செய்கிறார்கள். அவர்களை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

 

உங்களுடைய பொருளுதவியும், இங்கேயுள்ளவர்கள் உழைப்பும் சேர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை நடந்துகொண்டு இருக்கிறது. இது சுழிமுனை கதவு பூட்டு என்கின்ற புருவப்பூட்டு திறக்கும்வரை இந்த பயிற்சி இருக்கும். அதற்கு பிறகு செயல்பாடுகள் எல்லாம் மிக உயர்ந்து இருக்கும். அதற்குரிய காலமும் வந்துகொண்டு இருக்கிறது.

 

உண்மைப்பொருளை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். நாமெல்லோரும் உருகி தியானம் செய்ய வேண்டும். நாம் வெறுங்கையோடு போகக்கூடாது, அழுதால் பெறலாம், ஆசி கிடைக்கும் என்றார்.

 

எந்த அளவுக்கு உருகி தியானம் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு ஆசி பெறலாம் என்று சொல்லி உண்மை ஆன்மீகத்தை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். பூஜை செய்கிற முறையை சொல்லியிருக்கிறேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறேன். தடுமாற்றம் இருந்தால் திருமணம் செய்து கொள்ள சொல்லியுள்ளேன். தலைவனின் ஆசியைப் பெற்றால் தனித்து இருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறேன், சிற்றின்பத்திற்கு மயங்க வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறேன்.

 

பொருள் சேர்க்கும்போது நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்கச் சொல்லி இருக்கிறேன். பெரும்பாவி என்று பெயரெடுக்காமல் உங்களை காப்பாற்றிக் கொள்ள சொல்லியிருக்கிறேன். திருமணம் செய்து கொண்டாலும் பந்தபாசத்தில் அகப்பட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.

 

மலேசியாவிலிருந்து ஆண்களும், பெண்களுமாக வந்து தொண்டு செய்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் ஞானிகள் ஆசி இருக்கிறது. உங்களது தொண்டை நான் மதிக்கக் கூடியவன்.

இங்கு யார் செய்த தொண்டும் வீண் போகாது. யார் தொண்டு செய்தாலும் அதை உணர்கின்ற அறிவு எங்களுக்குண்டு.

 

வாய்த்திட்டால் மௌன குரு வாய்க்க வேண்டும்என்பார்கள். மோன நிலை என்றால் வாசி வசப்பட்டவர் என்று பொருள். தொண்டர்கள் செய்த தொண்டை உணரக் கூடியவன். அதுமட்டுமல்ல அவர்கள் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இங்கு தொண்டு செய்தால் வீண் போகாது. ஆகவே தொண்டர்களை மதிக்கிறோம். இங்கு தொண்டு செய்துவிட்டு யாரும் ஏமாந்து போகமாட்டார்கள்.

 

நாங்கள் அத்தகைய தொண்டர்களை புரிந்து கொண்டு, “அத்தொண்டன் நீடு வாழவேண்டும்என்றும், “உங்களுடைய ஆசியைப் பெற வேண்டும்என்றும், ஆசான் அகத்தீசனிடம் கேட்டோம். மேலும்அந்தத் தொண்டன் நல்லபடி இருக்க வேண்டும். நல்ல மனைவி மக்களோடு, புத்திர பாக்கியத்தோடு இருக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்வோம்.

 

இந்த சங்கத்தில் தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தாலே அது பெரும் பாக்கியம். தொண்டர்கள் கோபத்தின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ ஏதோ தவறு செய்து இருக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படலாம்.

 

நாங்கள் பார்ப்போம். இவையெல்லாம் மனிதருக்குள்ள இயல்புதான். அந்த தொண்டன் மனதிலே ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது நீங்குவதற்கு ஆசான் அருள் அவனுக்கு வேண்டும் என்று நினைப்போம்.

 

மலேசியாவில் தொண்டு செய்திருந்தாலும் சரி, இங்கு தொண்டு செய்திருந்தாலும் சரி, ஆசான் ஆசியினால் அதை புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் எங்களுக்கு உள்ளது. அவர்கள் எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும், நீடு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்வோம்.

 

இந்த சங்கத்திற்கு மனமுவந்து பொருளுதவி செய்த மக்களும், அல்லல்பட்டு தொண்டு செய்த மக்களும் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துவோம். காரணம் அவர்கள் உலக மக்கள் நன்மை அடைவதற்காக தொண்டு செய்கிறார்கள்.

 

அத்தகைய தொண்டர்கள் நல்ல நெறியை பின்பற்றி, நாமடைந்த உண்மையை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்ற வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. தமிழக அன்பர்களும், மலேசிய அன்பர்களும் நீடு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 

நான் போதிய கல்வி அறிவு இல்லாதவன். பேசியதில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும். கற்றுணர்ந்த பெரியோர்களும், சான்றோர்களும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம், வணக்கம்.

 

அதிமதுர வேலவன் அகிலமதை ஆண்டிட

கதிர்மதியை வெல்வர் களிப்புற்றே!

 

களிப்புற்று இவ்வுலகை கந்தவேலன் ஆண்டிட

செழிப்புற்று விளங்கும் செந்தமிழ் நாடே!

 

பந்தமற்ற வேலவன் பாருலகை ஆண்டிட

வந்திடும் நல்வாழ்வு வளமே.

 

நாட்டுப் பசுக்களோடு காளைகளையும் நன்னயமாய் காத்திடவே

வீடுபேறு இன்பம் உண்டாம் விரைந்தே.

ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

 

 

 

திருச்சி மாவட்டம், துறையூர்,

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்

மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

 

79. பிழைபடச் சொல்லேல்

(குற்றம் உண்டாகும் சொற்களை சொல்லாதே)

 

ஒருவனுக்கு ஆக்கம் தருவதும் அவனுடைய சொற்களே, ஒருவனுக்கு அழிவைத் தருவதும் அவனுடைய சொற்களே. ஆகவே ஒருவன் பேசும்பொழுது ஆக்கம் தரும் சொற்களை பேச வேண்டுமே தவிர, அழிவு தரும் சொற்களை பேசக் கூடாது என்பதாம்.

ஒருவனுடைய சொற்களே அவனது உயர்வையும், தாழ்வையும் சுட்டிக்காட்டி உயர்ந்தவன் என்பதையும், தாழ்ந்தவன் என்பதையும் காட்டிவிடும்.

 

மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் சொற்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டுமென பலவாறாய் வலியுறுத்துகிறார். ஏனெனில் ஒருவனுடைய சொற்களே அவனுக்கு ஆக்கத்தையும் கேட்டையும் உண்டாக்கவல்லவையாக உள்ளன.

 

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.

திருக்குறள் – சொல்வன்மை – குறள் எண் 642.

ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

சொற்களை பயன்படுத்தும்போது அடக்கமுடன் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் பயன்படுத்தினால் அது அறத்திற்கு புறம்பாய் பல தீய விளைவுகளை உண்டாக்கிவிடும், அது அவனையும் அவனை சார்ந்தோரையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார்.

 

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.

திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 128.

தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 129.

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

 

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 127.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

நன்றி மு.வரதராசனார்.

எனவே ஒருவனது சொற்கள் பிறரை இகழும்படியாகவோ குற்றம் உண்டாகும்படியாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவனது சொற்களே அவனுக்கும் அவனை சார்ந்தவர்க்கும் தீமை விளைவிக்க கூடியதாக மாறிவிடும் என்பதையும் அறிய வேண்டும்.

PDF பதிவிறக்கம் செய்ய 


Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 447
  • Total Visits: 270194
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்